உங்க போதைக்கு நான் ஊறுகாயா?: இளம் நடிகை, இயக்குனர் மீது வாரிசு நடிகர் கோபம்
Recommended Video

மும்பை: தன்னை பிளேபாய் ஆக்கிய நடிகை ஆலியா பட் மற்றும் இயக்குனர் கரண் ஜோஹார் மீது நடிகர் ரன்பிர் கபூர் கோபத்தில் உள்ளாராம்.
ரன்பிர் கபூரும், ஆலியா பட்டும் முதல் முறையாக ஜோடி சேர்ந்துள்ளனர். அயன் முகர்ஜி இயக்கி வரும் பிரம்மாஸ்திரா படத்தில் ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
படப்பிடிப்பு துவங்கியதில் இருந்து ஆலியா-ரன்பிர் பற்றி நிறைய செய்திகள் வெளியாகி வருகின்றன.

ரன்பிர்
ஆலியா பட் தனது காதலரான நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவை அண்மையில் பிரிந்துவிட்டார். ரன்பிர் கபூரோ நடிகை கத்ரீனா கைஃபை பிரிந்து சிங்கிளாக உள்ளார்.

கிசுகிசு
ஆலியாவும், ரன்பிர் கபூரும் காதலிப்பதாக பாலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது. இருவரும் ஜோடியாக பொது இடங்களில் இருக்கும் புகைப்படங்களும் வைரலாகியுள்ளது.

விளம்பரம்
படத்தின் விளம்பரத்திற்காக தன்னையும், ஆலியாவையும் சேர்த்து பேசுவது குறித்து ரன்பிர் கபூர் அதிருப்தி அடைந்துள்ளாராம். இது தொடர்பாக அவர் இயக்குனர் கரண் ஜோஹார், ஆலியா குழு மீது கோபத்தில் உள்ளார்.

கோபம்
அவர்கள் படத்தை விளம்பரம் செய்ய நான் தான் கிடைத்தேனா. என்னை பிளேபாய் ஆக்கி விளம்பரம் தேடுகிறார்களே என்று ரன்பிர் கபூர் கோபத்தில் உள்ளாராம்.

கூல்
ரன்பிர் கோபப்பட்டாலும் ஆலியா பட் இந்த காதல் கிசுகிசுக்களால் டென்ஷனே ஆகவில்லை. முன்பும் கூட அவருடன் நடித்த அர்ஜுன் கபூர், வருண் தவானுடன் கிசுகிசு பரவியது படத்திற்கு உதவியாக இருந்ததால் ஆலியா அமைதியாக இருக்கிறாராம்.


Click it and Unblock the Notifications











