Don't Miss!
- News யோசிக்கவேயில்லை.. அண்ணாமலை அப்பதான் விபூதி வெச்சாரு.. அதுக்குள்ள குபீர்னு ரூ.500.. நம்ம கோவையில்தான்
- Technology டீஸரே மிரளுது.. உலக ரசிகர்களை வியப்படைய செய்த Nothing.. புதுசா 2 ப்ராடக்ட்.. என்னென்ன எதிர்பார்க்கலாம்?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
ஐஸ்வர்யா ராயுடன் நெருங்கி நடிக்க வெட்கம் வெட்கமா வந்தது: ரன்பிர் கபூர்
மும்பை: ஏ தில் ஹை முஷ்கில் படத்தில் ஐஸ்வர்யா ராயுடன் நெருக்கமாக நடிக்க ரன்பிர் கபூருக்கு வெட்கமாக இருந்ததாம்.
கரண் ஜோஹார் இயக்கத்தில் ரன்பிர் கபூர், ஐஸ்வர்யா ராய், அனுஷ்கா சர்மா உள்ளிட்டோர் நடித்துள்ள ஏ தில் ஹை முஷ்கில் படம் வரும் 30ம் தேதி ரிலீஸாகிறது. படத்தில் ரன்பிர், ஐஸ்வர்யா ராய் மிகவும் நெருக்கமாக நடித்துள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இந்நிலையில் படம் மற்றும் ஐஸ்வர்யா பற்றி ரன்பிர் கூறுகையில்,
வெட்கம்
எனக்கு ஐஸ்வர்யா ராயுடன் நெருக்கமாக நடிக்க வெட்கம் வெட்கமாக வந்தது. கையெல்லாம் நடுங்கியது. அவரது கன்னத்தை தொடக் கூட ஒரு மாதிரியாக இருந்தது.
ஐஸ்வர்யா
நான் வெட்கத்தால் நடுங்கியதை பார்த்த ஐஸ்வர்யா ராயோ உனக்கு என்ன பிரச்சனை? நாம் நடிக்கத் தான் செய்கிறோம் ஒழுங்காக நடி என்று தைரியம் கொடுத்தார்.
வாய்ப்பு
முதலில் நடுங்கினாலும் பின்னர் ஐஸ்வர்யா ராயுடன் இது போன்று நடிக்க வாய்ப்பு கிடைக்காது. அதனால் துணிந்து வாய்ப்பை பயன்படுத்திக் கொள் என்று எனக்கு நானே கூறி நடித்தேன்.
ரன்பிர்
நான் பத்தாம் வகுப்பு முடித்திருந்தபோது ஐஸ்வர்யா ராயை முதன்முதலாக சந்தித்தேன். நான் என் தந்தையின் படத்தில் துணை இயக்குனராக இருந்தேன். அந்த படத்தில் நடித்த ஐஸ்வர்யா ராய் எனக்கு தோழியானார்.