Don't Miss!
- Automobiles தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
- News தமிழ்நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு சம்பளம் எவ்வளவு.. இவ்வளவு சலுகைகளா? ஆச்சர்யமான தகவல்கள்
- Technology iPhone-க்கு நெத்தி அடி.. வயர்லெஸ் MagCharge உடன் வந்த முதல் ஆண்ட்ராய்டு போன்.. Samsung இல்லை OnePlus இல்லை..
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
ரங்கா... திரில்லர் மூவி மூலம் ரசிகர்களை மிரள வைக்க வருகிறார் சிபிராஜ்
சென்னை: சிபிராஜ் நடிப்பில் உருவான அதிரடி திரில்லர் படமான ரங்கா படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதன் ஆடியோ வெளியீட்டு விழா விரைவில் நடைபெறும் என்று படக்குழு தெரிவித்துள்ளது
கடந்த 1982ஆம் ஆண்டில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், ராதிகா இணைந்து அதிரடி மற்றும் காமெடியில் கலக்கிய படம் ரங்கா. வசூலிலும் சாதனை படைத்த படம். தற்போது அதே தலைப்பில் சிபிராஜ் நடிப்பில் திரில்லர் படமாக உருவாகியுள்ளது.
குசும்பு என்றாலே அது நம்ம சத்யராஜ் தான். அவரின் வாரிசு என்றால் சும்மாவா. அவர் எட்டடி பாய்ந்தால் அவருடைய வாரிசு சிபிராஜ் பதினாறு அடி பாய்கிறார். பிரதீப் க்ரிஷ்ணமூர்த்தி தயாரிப்பில் 2017ஆம் ஆண்டு வெளியான மர்ம திரில்லர் சத்யா படத்திற்கு பிறகு நடித்திருக்கும் திரில்லர் படம் ரங்கா. படத்தின் டைட்டில் கேட்டவுடனேயே நம் நினைவுக்கு வருவது சூப்பர் ஸ்டார் நடித்த ரங்கா படம் தான்.
பாஸ் மூவிஸ் சார்பில் விஜய்.கே.செல்லய்யா தயாரிப்பில் இப்படத்தை இயக்கியுள்ளார் வினோத். D.L.ராம் ஜீவன் இசையமைத்துள்ள இப்படத்தில் சிபிராஜுக்கு ஜோடியாக, நிகிலா விமல் நடிக்கிறார். சதீஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் ட்ரைலர் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. ட்ரைலர் முழுவதும் குளுமையான இருட்டு பிரதேசமாக காணப்படுகிறது. படத்தின் காட்சிகள் பொள்ளாச்சி, காஷ்மீர் உள்ளிட்ட இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. இப்படம் சிபிராஜுக்கு ஒரு வெற்றிப்படமாக அமையும் என்று எதிர்பார்க்கிறார்.
ட்ரைலர் பார்க்கும் போதே மிகவும் த்ரில்லிங் ஆக இருக்கிறது என்றால், படம் எப்படி இருக்கும் என்ற ஆர்வம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. த்ரில்லர் படம் என்றாலே ரசிகர்களுக்கு ஒரு பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். அந்த ஆவல் இந்த படத்திற்கும் இருக்கிறது. இப்படத்தில் ஆடியோ வெளியிட்டு விழா மிக விரைவில் அறிவிக்கப்படும் என்றுள்ளார் படக்குழுவினர். அதுவரை பொறுத்திருப்போம்.