புருஷன்மார்களோட காச கள்ளத்தனமா கரியாக்குகிறீர்களா?: மருமகள், நஸ்ரியாவை கேட்ட மம்மூட்டி
திருவனந்தபுரம்: கணவன்மார்களுக்கு தெரியாமல் கள்ளத்தனமாக பணத்தை கரியாக்குகிறீர்களா என நடிகர் மம்மூட்டி தனது மருமகள் அமல் சுபியா மற்றும் நடிகை நஸ்ரியாவை கேட்டுள்ளார்.
நஸ்ரியா மலையாள நடிகர் ஃபஹத் பாசிலை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். அவர் மீண்டும் நடிக்க வருவார், வருவார் என்று கூறப்படுகிறதே தவிர அவர் சினிமா பக்கம் வருவதாக தெரியவில்லை.
இதற்கிடையே நஸ்ரியா வெயிட் போட்டு பூசினாற் போன்று உள்ளார்.

வீடு
நஸ்ரியா கேரளாவில் அபார்ட்மென்ட் ஒன்றை வாங்கியுள்ளார். நடிக்கும் வேலை இல்லாததால் அவர் புதிதாக வாங்கியுள்ள அபார்ட்மென்ட்டை அலங்கரிக்கும் அதாங்க இன்டீரியர் டிசைனிங் வேலையை கையில் எடுத்துள்ளார்.

மம்மூட்டி மருமகள்
நடிகர் துல்கர் சல்மானின் மனைவி அமல் சுபியா இன்டீரியர் டெகரேஷன் குறித்த படிப்பு படித்துள்ளார். அவரும் நஸ்ரியாவும் மிகவும் நெருங்கிய தோழிகள் ஆவர்.

உதவி
நஸ்ரியா தனது அபார்ட்மென்டடை அலங்கரிக்க தோழி அமல் சுபியாவின் உதவியை கேட்க அவரும் பேஷா செய்யலாமே என்று கூறியுள்ளார்.

ஷாப்பிங்
அபார்ட்மென்ட்டை அலங்கரிக்கத் தேவையான பொருட்களை வாங்க நஸ்ரியாவும், அமலும் கடை, கடையாக ஏறி வருகிறார்கள்.

மம்மூட்டி
கணவன்மார்களுக்கு தெரியாமல் கள்ளத்தனமாக பணத்தை கரியாக்குகிறீர்களா என கடை, கடையாக ஏறி இறங்கும் தனது மருமகள் அமல் சுபியா மற்றும் நடிகை நஸ்ரியாவிடம் நடிகர் மம்மூட்டி காமெடியாக கேட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











