Don't Miss!
- Sports போதும் டா! சாமி.. ரவீந்திராவை நம்பி ஏமாந்த சிஎஸ்கே.. கெத்தாக தொடங்கி சொத்தையாக மாறிய கதை
- News தென் சென்னை தொகுதியில் 2019ஐ விட 10% அதிகரித்த வாக்குப்பதிவு.. இது யாருக்கு லாபம்!
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Lifestyle உங்க வாழ்க்கையில் நீங்க எத அதிகமா விரும்புறீங்கன்னு தெரிஞ்சுக்கணுமா? அப்ப இதுல என்ன தெரியுது சொல்லுங்க..
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
ரொம்ப சாரி சாரி சாரி: மன்னிப்பு கேட்ட இயக்குனர் ராஜேஷ்
சென்னை: கடவுள் இருக்கான் குமாரு படத்தின் மூலம் யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள் என இயக்குனர் ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் வெளியான கடவுள் இருக்கான் குமாரு படத்தில் அஜீத், விஜய், ஸ்ருதி ஹாஸன், லட்சுமி ராமகிருஷ்ணனின் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி என ஏகத்திற்கும் கலாய்த்துள்ளனர்.
இந்நிலையில் இது குறித்து ராஜேஷ் கூறுகையில்,
தியேட்டர்
கடவுள் இருக்கான் குமாரு படத்தை தியேட்டரில் பார்த்தால் ஜாலியாக சந்தோஷமாக இருக்கும். இந்த படத்தை குடும்பத்துடன் பார்த்து ரசிக்கலாம். படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
ஸ்ருதி
இந்த படத்தில் யார் மனதையும் புண்புடுத்துவது எங்கள் நோக்கம் அல்ல. சிம்பு சாரையோ, ஸ்ருதி ஹாஸனையோ ஹர்ட் பண்ணனும்னு நினைக்கவில்லை.
சாரி சாரி
இது ஒரு ஃபன் படம். யார் மனதையும் காயப்படுத்தும் எண்ணம் இல்லை. அப்படி இருந்தும் யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் ரொம்ப சாரி சாரி சாரி.
இளைஞர்கள்
கடவுள் இருக்கான் குமாரு படம் இளைஞர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. நான் அனைத்து விமர்சனங்களையும் எடுத்துக் கொள்வது இல்லை. ஏன் என்றால் விமர்சிப்பது எளிது. சினிமா படம் பண்ணுவது கடினம்.