Don't Miss!
- News ராஜ நடை போடும் காலம்.. சிங்கம் போல மாற போகும் சிம்மம்.. குரு பெயர்ச்சி பலன் என்ன தெரியுமா?
- Lifestyle கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- Automobiles தார் ரோடு, பாறைகள் நிறைந்த ஆஃப்-ரோடு எதா இருந்தாலும் ஒரு கை பாத்திடலாம்! இந்தியாக்கு ஏத்த கார் விராங்ளர்!
- Technology உங்க மொபைலில் கூகுள் பே, போன் பே, பேடிஎம் செயலிகள் இருக்கா? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.. ஏன்?
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
புருவ அழகிக்கு நேரும் பரிதாபம்.. மொபைல் போன்ல சிம் கார்டே இல்லையாம்!
Recommended Video
திருவனந்தபுரம் : மலையாளத்தில் 'ஒரு அடார் லவ்' படத்தில் இடம்பெற்ற 'மாணிக்ய மலராய பூவி' என்கிற ஒரு பாடலில், புருவம் உயர்த்தி, கண்களை சிமிட்டி உலக ரசிகர்களை ஈர்த்தவர் புருவ அழகி பிரியா வாரியர்.
கண் அசைப்பில் இளைஞர்களை மயக்கிப்போட்ட பிரியா வாரியர் ஓவர் நைட்டில் சென்சேஷன் ஆனார். இதைத் தொடர்ந்து இவரை பேஸ்புக் இன்ஸ்டாகிராமில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை சில மில்லியன்களைத் தொட்டது.
பிரியா வாரியர் மொபைல் போன் பயன்படுத்துவதற்கு அவரது தந்தை தடைவிதித்துள்ளாராம். பிரியாவின் கையில் தற்போது ஒரு செல்போன் இருந்தாலும் கூட, அதில் சிம் கார்டு இல்லாததால் யாருடனும் போனில் பேசவும் முடியாதாம்.
இந்தத் தகவலை பிரியாவின் தந்தையே தெரிவித்துள்ளார். தற்போது தனது அம்மாவின் செல்போனை பயன்படுத்தித்தான் தனது நண்பர்களிடம் பேசி வருகிறாராம் பிரியா. அதிலும் இன்டர்நெட் பயன்படுத்த வேண்டும் என்றால் கூட, எங்கே வைஃபை இணைப்பு கிடைக்கிறதோ அந்த இடத்தில் மட்டும் பயன்படுத்திக்கொள்ள அவரது தந்தை அனுமதித்துள்ளாராம்.
'ஒரு அடார் லவ்' படத்தைத் தொடர்ந்து பாலிவுட்டில் இரண்டு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இன்ஸ்டாகிராமில் ஸ்பான்ஸர் போஸ்டுக்கு எட்டு லட்சம் வாங்குகிறாராம். ஆனால், மொபைல் போன் பயன்படுத்த முடியாத பரிதாப நிலை.