ஆத்தா மகமாயி, பவுலிங்கா-ஃபீல்டிங்கா: மறக்க முடியுமா சண்முக சுந்தரத்தை?
சென்னை: குணசித்திர நடிகர் சண்முக சுந்தரம் மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கரகாட்டக்காரன் படத்தில் கனகாவின் தந்தையாக நடித்த குணசித்திர நடிகர் சண்முக சுந்தரம் உடல் நலக்குறைவு காரணமாக இன்று மரணம் அடைந்தார். அவரது இறுதிச் சடங்குகள் நாளை நடைபெற உள்ளது.
அவரின் மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
குரல்
நிறைய பேருக்கு தெரியாது துரியோதனனுக்கு குரல் கொடுத்த அந்த கம்பீரக்குரல் இவருடையதுனு. Rip #ShanmugaSundaram
ஆத்தா மகமாயி
ஆத்தா மகமாயி, பவுலிங்கா ஃபீல்டிங்கா போன்ற வசனங்களை தந்தவர் உயிரோடு இல்லை. அவரது ஆத்மா சாந்தி அடையட்டும்🙏🙏🙏 #ShanmugaSundaram
மிமிக்ரி
RIP sir #ShanmugaSundaram sir
உங்கள் குரலை வைத்து தான் மிமிக்ரியை துவங்கினேன் என்று நடிகர் ரோபோ ஷங்கர் ட்வீட்டியுள்ளார்.
சிபி
Rip #ShanmugaSundaram sir! தமிழ் சினிமா ஒரு சிறந்த நடிகரை இழந்துவிட்டது என்று நடிகர் சிபி சத்யராஜ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











