பொய் சொல்றாரா லெஜண்ட் ஹீரோயின்.. ஆதாரத்துடன் வச்சு விளாசும் ரிஷப் பண்ட் ஆர்மியினர்!
சென்னை: பாலிவுட்டில் படு கவர்ச்சியாக நடித்து வந்த ஊர்வசி ரவுத்தேலா சமீபத்தில் லெஜண்ட் சரவணன் நடிப்பில் வெளியான தி லெஜண்ட் திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.
சோஷியல் மீடியாவில் திடீரென ஊர்வசிக்கும் கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்டுக்கும் இடையே மிகப்பெரிய சண்டை வெடித்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
இருவரும் பெயரை சொல்லிக் கொள்ளவில்லை என்றாலும், பேட், பால் விளையாடு தம்பி என ஊர்வசி ரவுத்தேலா ரிஷப் பண்டை நேரடியாக விளாசி உள்ளது சர்ச்சையை கிளப்பி உள்ளது.

17 மிஸ்ட் கால்
தான் தங்கியிருந்த ஹோட்டல் அறைக்கு வந்து 12 மணி நேரத்திற்கும் மேலாக காத்துக் கொண்டிருந்து இருக்கிறார் கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட். நான் எழுந்து பார்க்கிறேன், மொத்தம் 17 மிஸ்ட் கால், மும்பைக்கு வந்த பிறகு பார்க்கலாம் என சொல்லி அனுப்பி விட்டேன் என ஊர்வசி ரவுத்தேலா ரிஷப் பண்டின் பெயரை மட்டும் குறிப்பிடாமல் சமீபத்தில் அளித்த பேட்டி தான் இந்த சர்ச்சைக்கு காரணம்.

3 பந்துக்கு கூட வெயிட் பண்ண மாட்டார்
ஊர்வசி ரவுத்தேலா ரிஷப் பண்டை தம்பி போய் பந்து விளையாடு என மிரட்டிய நிலையில், கொந்தளித்த கிரிக்கெட் ரசிகர்கள், அவர் 3 பந்துக்கு கூட வெயிட் பண்ணாமல் சிக்ஸ் அடிக்கக் கூடியவர், உனக்காக 12 மணி நேரம் வெயிட் பண்ணாரா, ஒரேயடியா புழுகாதே என திட்டித் தீர்த்து வருகின்றனர்.

பொய்க்காரி
உங்களுக்கு பிடித்த கிரிக்கெட் யார் என்கிற ரசிகரின் கேள்விக்கு, எனக்கு கிரிக்கெட் பார்க்கும் பழக்கமே இல்லை, எந்த கிரிக்கெட்டரையும் பிடிக்காதுன்னு சொல்லிட்டு, ரிஷப் பண்ட் விளையாடுற மேட்ச்சை முதல் ஆளா போய் உட்கார்ந்து பார்க்குற அளவுக்கு ஊர்வசி ரவுத்தேலா பொய்க்காரி என நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.

உக்ரைன் - ரஷ்யா போரை விட
உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய போரை விட இந்த போர் நல்லா இருக்கு என நெட்டிசன்கள் சோஷியல் மீடியாவில் ரிஷப் பண்ட் மற்றும் ஊர்வசி ரவுத்தேலாவை ட்ரோல் செய்து டிரெண்ட் செய்து வருகின்றனர். ரிஷப் பண்ட் கொஞ்சம் பொறுமையாக இருந்திருக்கலாம் என்றும், பொறுமையை இழந்ததால் தான் இப்படியொரு நிலைமை என்றும் விளாசி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











