Don't Miss!
- Automobiles 21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
- Lifestyle Today Rasi Palan 24 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனைகளில் தலையிடாமல் இருந்தால் நல்லது...
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
நானும், ராஜசேகர் அப்பாவும் நண்பர்கள்தான், நில மோசடி வழக்கை சந்திப்பேன்.. நடிகர் ரித்தீஷ்
அருப்புக்கோட்டை: என் மீது வேண்டும் என்றே நில மோசடி பொய் வழக்கைப் போட்டுள்ளனர். வழக்கைப் போட்டுள்ளவர் எனது நண்பர்தான். இந்த வழக்கை நான் சட்டப்படி சந்திப்பேன் என்று கூறியுள்ளார் 'பொழுதன்னிக்கும்' வன்முறை, கலாட்டா, அடிதடி உள்ளிட்ட விவகாரங்களில் சிக்கி கோர்ட்டுக்கும், வீட்டுக்குமாக நடந்து கொண்டிருக்கும் திமுக எம்.பியும், நடிகருமான ஜே.கே.ரித்தீஷ்.
நடிகர் ரித்தீஷ் மீது அடிக்கடி வழக்குகள் பாய்ந்து வருகின்றன. அவரும் சும்மா இருப்பதில்லை. ஏதாவது வம்பிழுத்து சண்டைக்குப் போய் விடுகிறார். சமீபத்தில் கூட, பசும்பொன்னில் நடந்த முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தி விழாவின்போது, அஞ்சலி செலுத்துவதற்காக வந்த திமுக பொதுச் செயலாளர் அன்பழகனை வரவேற்பது மற்றும் வழியனுப்புவது தொடர்பாக ரித்தீஷ் கோஷ்டியினருக்கும், சுப. தங்கவேலன் கோஷ்டியினருக்கும் இடையே செமத்தியான சண்டை நடந்தது. ஆளாளுக்கு அடித்துக் கொண்டனர், வெட்டு விழுந்தது, ரத்தக் களறியானது.
தேவர் நினைவிடத்தில் அன்பழகன் மலர் வளையம் வைத்துவிட்டு சென்னை செல்லும் முன் அருப்புக்கோட்டையில் பைபாஸ் ரோட்டில் உள்ள முன்னாள் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் நூற்பு மில்லில் மதிய உணவிற்கு வந்தார். அப்போது சுப.தங்கவேலன், ரித்தீஷ் எம்.பி. கோஷ்டிகளுக்கு இடையே பெரும் மோதல் மூண்டது.
இதுதொடர்பாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில், ரித்தீஷ். அவரது உதவியாளர் நாகராஜன் உள்ளிட்டோர் மீது கொலை முயற்சி, பொது சொத்தை சேதப்படுத்துவது உள்பட பல பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து தேடி வந்தனர்.
இந்நிலையில் ரித்தீஷ் மற்றும் உதவியாளர் நாகராஜ் இருவரும் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் ஜாமீன் பெற்றனர். அதனைத் தொடர்ந்து இருவரும் அருப்புக்கோட்டை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பு சரணடைந்தனர். பின்னர் இருவரும் தனித்தனியே இரு நபர் ஜாமீன் பெற்றுச் சென்றனர்.
இந்த நிலையில், சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜசேகர் என்பவர் சென்னை போலீஸ் கமிஷனரிடம் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில், என் தந்தை முருகேசனிடம் 20 கோடி ரூபாய்க்கு இடம் வாங்கித் தருவதாக எம்.பி. ரித்தீஷ் பணம் பெற்றுக் கொண்டு இடம் வாங்கித் தரவில்லை. வேறு இடம் வாங்கித் தருவதாக கூறியிருந்தார். ஆனால் வேறு இடமும் வாங்கித் தரவில்லை. ரூபாயும் திருப்பித் தரவில்லை என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து அருப்புக்கோட்டைக்கு வந்த ரித்தீஷிடம் என்ன விஷயம் என்று கேட்டபோது, நானும், ராஜசேகர் தந்தை முருகேசனும் நெருங்கிய நண்பர்கள். பல கோடி ரூபாய்க்கு இருவரும் சேர்ந்து தொழில் செய்துள்ளோம். தற்போது இடப் பிரச்சினையில் சில குளறுபடி இருந்ததால் காலதாமதம் ஏற்பட்டது. அதனை காரணம் காட்டி சிலரின் தூண்டுதலின் பேரில் ராஜசேகர் என் மீது பொய் புகார் கொடுத்துள்ளார். அதனை சட்டப்படி நீதிமன்றத்தில் வழக்கை சந்திப்போம் என்றார் ரித்தீஷ்.
-
முடிச்சிடலாமா.. கூலி டைட்டில் டீசரில் ரஜினியின் டயலாக்.. முந்தைய படங்களை போலவே மாஸ் காட்டும் லோகேஷ்!
-
Coolie movie: ஒரு மணிநேரத்தில் 1 மில்லியன் வியூஸ்.. கெத்து காட்டும் ரஜினியின் கூலி பட டைட்டில் டீசர்
-
Rajinikanth: அப்பாவும் தாத்தாவும் வந்தார்கள் போனார்கள்.. வைரலாகும் ரஜினி பட பாடல் வரிகள்!