ஆர்கே நகர் இடைத்தேர்தல்: கோர்த்துவிடப் பார்த்த நடிகர், நைசாக நழுவிய கங்கை அமரன் மகன்

By Siva

Recommended Video

ஆர்கே நகர் இடைத்தேர்தல்: கோர்த்துவிடப் பார்த்த நடிகர்- வீடியோ

சென்னை: ஆர்கே நகர் பற்றி நடிகர் நிதின் சத்யா கேட்ட கேள்விக்கு சேஃபாக பதில் அளித்துள்ளார் இயக்குனர் வெங்கட் பிரபு.

30 ஆண்டுகளுக்கு முன்பு எம்.ஜி.ஆர். மடியில் அமர்ந்து எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு தனது மகிழ்ச்சியை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார் இயக்குனர் வெங்கட் பிரபு.

அதே சமயம் நடிகர் நிதின் சத்யா ஆர்கே நகர் தொடர்பாக வெங்கட் பிரபுவிடம் கேள்வி கேட்க அவர் நழுவிவிட்டார்.

எம்.ஜி.ஆர்.

என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள். முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது. எனது மிருதங்க அரங்கேற்றத்தில். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ஆசிர்வதித்தார். அவர் மடியில் உட்காரும் பாக்கியம் கிடைத்தது. என்ன ஒரு பரிசு. இதை சாத்தியமாக்கிய என் பெற்றோருக்கு நன்றி என்று வெங்கட் பிரபு ட்வீட்டியுள்ளார்.

ஆசி

உங்களுக்கு தான் அவரின் ஆசி உள்ளதே. அப்படி என்றால் நீங்கள் ஏன் ஆர்கே நகருக்கு ஏதாவது செய்யக் கூடாது என்று நடிகர் நிதின் சத்யா வெங்கட் பிரபுவிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

படம்

நிதின் சத்யாவின் ட்வீட்டை பார்த்த வெங்கட் பிரபுவோ, அதனால் தான் ஆர்கே நகர் படத்தை எடுக்கிறேன் என்று பதில் அளித்துள்ளார்.

அறிவிப்பு

அறிவிப்பு

ஆர்கே நகருக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நிதின் சத்யா கேட்ட கேள்விக்கு வெங்கட் பிரபு சேஃபாக பதில் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இரட்டை இலை

பாஸ் செம. உடனே போய் அதிமுக சின்னத்த கைப்பற்றுங்க.
#சின்னபுரட்சிதலைவர் என ரசிகர் ஒருவர் உசுப்பேத்தியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X