Don't Miss!
- News
கர்நாடகாவில் பத்ரா மேலணை திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு.. தேர்தல் தேர்தல் என எதிர்க்கட்சிகள் கூச்சல்
- Technology
மலிவு விலையில் 28 நாட்கள் வேலிடிட்டி உடன் புதிய திட்டத்தை அறிமுகம் செய்து அதிரடி காட்டிய Vodafone Idea!
- Finance
மத்திய பட்ஜெட் 2023: மோடி அரசின் 7 முன்னுரிமைகள் - நிர்மலா சீதாராமன்
- Automobiles
இந்த மாதிரி டபுள்-டக்கர் பேருந்து எல்லாம் வந்தா நம்ம சென்னை வேற லெவல் ஆயிடும்!! அதுவும் எலக்ட்ரிக் தரத்தில்...
- Lifestyle
பட்ஜெட் 2023: இந்த ஆண்டு சிவப்பு நிற கைத்தறி புடவையில் பட்ஜெட் தாக்கல் செய்யும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
- Sports
2 தீராத குழப்பங்கள்.. நியூசி, உடனான 3வது டி20 போட்டி.. முடிவெடுக்க தடுமாறும் ஹர்திக் பாண்ட்யா!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
‘ராக்கெட்ரி’ படத்திற்காக சூர்யா, ஷாருக்கான் செய்த செயல்.. நெகிழ்ந்த மாதவன் !
சென்னை : 'ராக்கெட்ரி : தி நம்பி எஃபெக்ட் ' திரைப்படத்தில் நடிக்க சூர்யா மற்றும் ஷாருக்கான் சம்பளமே வாங்கவில்லை என மாதவன் நெகிழ்ச்சியுடன் கூறினார்.
இத்திரைப்படத்தில் நடித்தது மட்டுமில்லாமல் இயக்குநராகவும் மாறி நீண்டநாள் கனவை நிறைவேற்றி உள்ளார் மாதவன்.
இதில், சிம்ரன், ரஜித் கபூர், ரவி ராகவேந்திரா, மிஷா கோஷல், குல்ஷன் குரோவர், கார்த்திக் குமார் மற்றும் தினேஷ் பிரபாகர் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.
விஜய்க்கு
போன்
போட்டு
வாழ்த்திய
கமல்..
தளபதி
67லும்
விக்ரம்
கனெக்ஷன்
இருக்கும்
போல
தெரியுதே!

ராக்கெட்ரி : தி நம்பி எஃபெக்ட்
'ராக்கெட்ரி : தி நம்பி எஃபெக்ட் ' திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் பேசிய மாதவன், செய்தியாளர் கேட்ட பல கேள்விக்கு இஸ்ரோ விஞ்ஞானி போலவே பதிலளித்தார். இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் சாதனை உலகத்திற்கு இதுவரை தெரியாது எனக்குள் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியது. இதனால் இந்தபடத்தை வெறித்தனமா எடுத்ததாக கூறியுள்ளார்.

சம்பளம் வாங்கவில்லை
இந்த திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மற்றும் நடிகர் சூர்யா நடித்துள்ளனர். சூர்யா, ஷாருக்கான் இருவரும் படத்திற்கு எந்த சம்பளமும் வாங்கவில்லை. கேரவன்கள், உடைகள் மற்றும் உதவியாளர்களுக்காக கூட அவர்கள் சம்பளம் வாங்கவில்லை. மும்பையில் படப்பிடிப்பு நடந்த போது சூர்யா தனது சொந்த செலவில் விமானத்தில் வந்தார்.அதற்காக விமான கட்டணத்தை கூட அவர் வாங்கவில்லை. திரையுலகில் நிறைய நல்லவர்கள் இருக்கிறார்கள்.

ஜூலை 1ந் தேதி ரிலீஸ்
ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட் திரைப்படம் ஜூலை 1ந் தேதி அன்று உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. ஒரே நேரத்தில் இந்தி, தமிழ், ஆங்கில மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம், கன்னடம் மற்றும் மலையாள மொழிகளிலும் வெளியாகிறது. இப்படத்தின் டீசர் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

வாழ்க்கை வரலாறு
இஸ்ரோவில் பணியாற்றிய விண்வெளி ஆராய்ச்சியாளர் நம்பி நாராயணின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்தை முதலில் ஆனந்த் மகாதேவன் இயக்கிய நிலையில், அவர் படத்திலிருந்து விலகினார். இதையடுத்தே, நடிகர் மாதவன் இப்படத்தை இயக்கினார்.

6 மொழிகளில்
6 மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை டிரிகலர் பிலிம்ஸ், வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் மற்றும் 27 இன்வெஸ்ட்மெண்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. சிம்ரன், மாதவனின் மனைவியாக நடித்துள்ளார். ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட் திரைப்படத்தின் படப்பிடிப்பு இந்தியா, ஸ்காட்லாந்து, பிரான்ஸ், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் படமாக்கப்பட்டது.