Don't Miss!
- Sports RR vs DC : எமோஷனலாக இருக்கேன்.. சஞ்சு சாம்சன் உள்ளே வந்து ஒன்றை சொன்னார்.. ரியான் பராக் நெகிழ்ச்சி!
- News சென்னையில் பிரபல ‛பப்’ மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து.. மெட்ரோ பணிகள் காரணமா! பகீர் தகவல்
- Automobiles கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
திரைத் துளி
திடீர் பரபரப்பை ஏற்படுத்திய ரகுவரன்-ரோகிணி தம்பதியருக்குள் சமரசம் ஏற்பட்டுள்ளது.
போதை வஸ்துக்களுக்கு அடிமையான ரகுவரனை திருத்தி திருமணம் செய்து கொண்டார்ரோகிணி. கல்யாணத்திற்குப் பிறகு புது மனிதனாக உலவி வந்த ரகுவரன், சமீபகாலமாக மறுபடியும்போதை வஸ்துக்களை நாட ஆரம்பித்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த ரோகிணி, திடீரென்று தன் குழந்தையுடன் ரகுவரனைப் பிரிந்து சென்றார்.
இதை சற்றும் எதிர்பார்க்காத ரகுவரன் ஆடிப் போய் விட்டார். ரோகிணி இல்லாவிட்டால் கூடபரவாயில்லை. எனக்கு என் குழந்தை வேண்டும் என்று புலம்ப ஆரம்பித்தார். பத்திரிகைகளுக்குக்கொடுத்த பேட்டிகளில் கண்ணீர் விட்டார்.
மேலும் மீண்டும் தீவிரமாக போதை வஸ்துக்களை சாப்பிட ஆரம்பித்தார். இதனால் உடல் நலம்பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டார். திடீரென்று சினிமாவுக்குமுழுக்குப் போடப் போவதாகவும் அறிவித்தார்.
ரகுவரன்-ரோகிணியின் இந்த திடீர் பிரிவால் அதிர்ச்சியடைந்த அவர்களது நெருங்கிய நண்பர்கள்,அவர்களை இணைக்கும் முயற்சிகளில் இறங்கினர். நடிகர் நாசரின் மனைவி கமீலா, நடிகை ரேவதிஆகியோர் ரோகிணியிடம் பேசினர்.
அதே போல நடிகர் சத்யராஜ், இயக்குநர் சரண் உள்ளிட்ட சிலர் ரகுவரனிடம் பேசினர். இதன்தொடர்ச்சியாக இருவருக்கும் இடையே சமரசம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ரகுவரனுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்றால் சில நிபந்தனைகளுக்கு அவர் கட்டுப்பட வேண்டும்.ரகுவரனின் பாதுகாப்புக்காகத்தான் இந்த நிபந்தனைகள் என்று ரோகிணி கூறியிருக்கிறார்.
ரோகிணி என்ன சொன்னாலும் ஏற்றுக் கொள்கிறேன் என்று ரகுவரனும் கூறிவிட்டாராம். எனவேவிரைவில் ரகுவரனின் வீட்டுக்கே செல்லவிருக்கிறாராம் ரோகிணி.