Don't Miss!
- Sports என்னங்க சொல்றீங்க? சிஎஸ்கேக்கு வருகிறாரா ஆஸி. வேகம் ஹேசல்வுட்.. உண்மை என்ன?
- News தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 தொகுதிகளுக்கும் இன்று லோக்சபா தேர்தல்: மாதிரி வாக்குப்பதிவு தொடங்கியது!
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
அதுக்கு ஆசை இருக்கு ஆனால் தைரியம் இல்லையே: மணிரத்னம் ஹீரோயின்
சென்னை: படம் இயக்கும் ஆசை உள்ளது ஆனால் அதற்கு தைரியம் இன்னும் வரவில்லை என்று நடிகை மது தெரிவித்துள்ளார்.
மணிரத்னத்தின் ரோஜா படம் மூலம் பிரபலமானவர் நடிகை மது. ரோஜா படம் வெளியாகி 25 ஆண்டுகள் ஆகியும் அதை மக்கள் இன்னும் மறக்கவில்லை.
இது குறித்து மது பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,
25 ஆண்டுகள்
ரோஜா படம் வந்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டது. எனக்கு பிடித்த கதாபாத்திரங்கள் பல உள்ளன. ஆனால் ரோஜா எனக்கு ஸ்பெஷலான படம் ஆகும். இந்த படத்தை தான் 25 ஆண்டுகள் கழித்தும் நினைவு வைத்துள்ளனர்.
பட வாய்ப்பு
மணிரத்னம் சாரின் இயக்கத்தில் மீண்டும் நடிக்க ஆவலாக உள்ளேன். நானும் இருக்கிறேன் என்பதை நினைவூட்ட நான் மணி சாரை அவ்வப்போது சந்தித்து பேசுவது உண்டு.
கதை
தமிழ் படங்களில் நடிக்க நிறைய வாய்ப்புகள் வருகின்றது. ஆனால் எனக்கு பிடித்த மாதிரி இல்லை. குறிப்பிட்ட தயாரிப்பு நிறுவனங்கள், நடிகர்களின் படங்களில் நடிக்க விரும்புகிறேன்.
ஆசை
படங்களை இயக்கினால் என்ன என்று சில நேரம் தோன்றும். ஆனால் அதற்கு தேவையான தொழில்நுட்ப அறிவு என்னிடம் இல்லை. என் நண்பர்களில் சிலர் சிறந்த ஒளிப்பதிவாளர்கள். அவர்கள் ஊக்கமளித்தாலும் தைரியம் வரவில்லை. ஒரு நாள் நான் படம் இயக்கலாம் என்றார் மது.