Don't Miss!
- Automobiles 21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
- Lifestyle Today Rasi Palan 24 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனைகளில் தலையிடாமல் இருந்தால் நல்லது...
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
மூன்று நாட்கள் மூடப்பட்டதால் ரூ 60 கோடியை இழந்த திரையரங்குகள், மல்டிப்ளெக்ஸ்கள்!
சென்னை: தமிழகத்தில் தொடர்ந்து 3 நாட்களாக திரையரங்குகள், மல்டிப்ளெக்ஸ் அரங்குகள் மூடப்பட்டதால் இதுவரை ரூ 60 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜிஎஸ்டி, கேளிக்கை வரி என இரட்டை வரி விதிப்புக்கு ஆளாகியுள்ளது தமிழ் திரையுலகம். இதுவரை காணாத பெரும் வரி விதிப்பாகும். இந்த நிலையை எதிர்த்து ஒட்டு மொத்த திரையுலகமே திரண்டு நிற்கிறது.
மாநிலத்தில் உள்ள 1050 திரையரங்குகளும் தொடர்ந்து 3வது நாளாக மூடப்பட்டுள்ளன. இதுவரை தமிழ் சினிமா சந்தித்திராத நெருக்கடி இது.
ரூ 60 கோடி
இந்த ஸ்ட்ரைக்கால் ரூ 60 கோடியை இழந்துள்ளனர் தியேட்டர்காரர்களும், மல்டிப்ளெக்ஸ் நடத்துபவர்களும். இந்த நஷ்டம், உணவுப் பொருள்கள், குளிர்பானங்கள் உள்ளிட்டவற்றை விற்கும் கடைகளுக்கும் சேர்த்துதான்.
கேளிக்கை வரிதான் தலைவலி
திரைத்துறையினர் முக்கியமாக எதிர்ப்பது இதுவரை இல்லாமல் இருந்த 30 சதவீத கேளிக்கை வரி மீண்டும் திணிக்கப்பட்டிருப்பதைத்தான். ஜி.எஸ்.டி. வரி இப்போது இரண்டாம்பட்சம்தான். எனவே தமிழக அரசின் அறிவிப்பை பொறுத்தே தியேட்டர்கள் திறப்பு பற்றி முடிவு எடுக்கப்படும்.
நாளையுமா?
தியேட்டர்கள் மூடப்பட்டதால் தமிழ்நாட்டில் தினமும் ரூ.15 முதல் ரூ.20 கோடி வரை இழப்பு ஏற்படுகிறது. எனவே 3-வது நாளாக தியேட்டர் மூடப்பட்டுள்ளதால் ரூ.60 கோடி வரை இழப்பு ஏற்பட்டு இருப்பதாக தியேட்டர் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். நாளையும் மூடினால் இழப்பு தாங்க முடியாமல் போய்விடும்.
பாதிக்கப்பட்ட புதுப்படங்கள்
சமீபத்தில் திரைக்கு வந்த 10 புதிய படங்கள் சில நாட்கள் ஓடிய நிலையில் தியேட்டர்கள் மூடப்பட்டன. இந்த பட தயாரிப்பாளர்கள் தியேட்டர் ஸ்டிரைக்கை விரைவில் முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறார்கள். புதிய படங்களை வெளியிட முடியாமல் அவதிப்படுகின்றனர் தயாரிப்பாளர்கள்.