Don't Miss!
- Automobiles உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- News "ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறை!" 12 ஆண்டுகளுக்கு பின் 2ஜி வழக்கின் தீர்ப்பில்.. மத்திய அரசு மேல்முறையீடு
- Sports தோனிக்கு ஒரு பந்துதான்.. சோலியை முடித்த துபே - ருது.. சிஎஸ்கே பேட்டிங்கை கண்டு கலங்கிய லக்னோ
- Lifestyle மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஏ.ஆர்.முருகதாஸால் தனுஷ் படத்தை தவறவிட்ட எஸ்.ஜே.சூர்யா
ஹைதராபாத்: தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவின் அடுத்த படத்தில் அவருக்கு வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடிக்கவுள்ளார்.
குஷி, வாலி படங்களின் மூலம் விஜய், அஜீத்தின் மார்க்கெட்டை உயர்த்தியதில் எஸ்.ஜே.சூர்யாவிற்கு கணிசமான பங்குண்டு.
தொடர்ந்து ஹீரோ ஆசையால் படங்கள் இயக்குவதை குறைத்துக் கொண்ட எஸ்.ஜே.சூர்யா தற்போது நடிக்கத் தொடங்கியிருக்கிறார்.
கார்த்திக் சுப்புராஜின் இறைவியைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் அவர் நடிக்கவுள்ளார். தமிழ், தெலுங்கு என 2 மொழிகளில் உருவாகும் இப்படத்தில் மகேஷ்பாபுவை மிரட்டும் வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடிக்கவுள்ளார்.
மகேஷ்பாபுவிற்கு வில்லனாக நடித்தாலும் மற்றொருபுறம் எஸ்.ஜே.சூர்யாவிற்கு தீராத வருத்தமொன்று இருக்கிறதாம்.
அதாவது மகேஷ்பாபு படத்தால் 'என்னை நோக்கி பாயும் தோட்டா' படத்தில் தனுஷிற்கு வில்லனாக நடிக்கும் வாய்ப்பை அவர் தவற விட்டிருக்கிறார்.
இதுதான் எஸ்.ஜே.சூர்யாவின் வருத்தத்திற்கு காரணமாம். மகேஷ்பாபு-முருகதாஸ் படம் ஜூலை மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
என்னது விக்ரம் நடித்த மெகா ஹிட் படத்தில் நடிக்க வேண்டியது அந்த நடிகரா?.. செமயா இருந்திருக்குமே
-
என்னை அரசியலுக்கு வரவிடாதீங்க.. நீங்க நல்லது செய்யுங்க.. நான் நடிச்சுட்டு போய்டுவேன்.. விஷால் பேட்டி!
-
நான் பிச்சை எடுத்தாலும் மக்களுக்கான சேவை தொடர்ந்து செய்வேன்! நடிகர் பாலா உருக்கமான பேட்டி!