பிரபல பாடகி எஸ் ஜானகி குளியலறையில் வழுக்கி விழுந்ததில் காயமடைந்தார்.

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க சென்றிருந்தார் ஜானகி. 73 வயதான அவர் காலையில் தரிசனத்தை முடித்துக் கொண்டு தங்கியிருந்த ஹோட்டலுக்கு திரும்பினார். இன்று காலை அவர் குளியலறை சென்றபோது வழுக்கி விழுந்தார்.
உடனடியாக திருப்பதியில் உள்ள வெங்கடேஸ்வரா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
இப்போது அவர் உடல்நிலை நன்றாக உள்ளதாக அவரது மகன் தெரிவித்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஒரியா, மராத்தி என இந்தியாவின் பல்வேறு மொழிகளில் 30 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களைப் பாடி புகழ்பெற்றவர் ஜானகி. தேசிய விருது வென்றவர்.
Comments


Click it and Unblock the Notifications