Don't Miss!
- News பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பில் முதல் அரெஸ்ட்.. முஸம்மில் ஷரீப் என்பவரை கைது செய்த என்ஏஐ
- Sports RR vs DC : 36-3.. திடீரென உள்ளே புகுந்த அஸ்வின்.. அடுத்தடுத்து பறந்த சிக்சர்கள்.. தப்பிய ராஜஸ்தான்!
- Automobiles உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
பாகுபலி பாணி சரித்திரக் கதையை கையில் எடுக்கும் ஜனநாதன்
சென்னை: தமிழ் சினிமாவின் குறிப்பிடத் தகுந்த இயக்குனர்களில் எஸ்.பி.ஜனநாதனும் ஒருவர், அவரது படங்கள் எல்லாமே சமூகத்தின் மீது அக்கறையைக் காட்டும் ரகங்களைச் சேர்ந்தவையாகவே இருக்கும்.
அந்த வகையில் அவரது அடுத்த படம் சரித்திரத் தொடர்பான ஒரு வரலாற்றுக் கதையாக இருக்கும் என்று கூறியுள்ளார், பாகுபலி வெற்றியால் நிறைய இயக்குனர்கள் தற்போது சரித்திரப் படங்களின் மீது கவனத்தைத் திருப்பியுள்ளனர்.
அந்த வகையில் இயக்குநர் ஜனநாதனும் தனது ஆசையை வெளிப்படையாகப் பகிர்ந்து கொண்டுள்ளார், சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் சரித்திரப் படம் ஒன்றை இயக்க ஆசைப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
இயற்கை
ஷாம் நடித்த இயற்கை படத்தின் மூலம் இயக்குனராக 2003 ம் ஆண்டு தமிழ்த் திரையுலகில் அறிமுகமான எஸ்.பி.ஜனநாதன், முதல் படத்திலேயே தேசிய விருது பெற்றவர்.
இயற்கை தொடங்கி புறம்போக்கு வரை
இயக்குனராக இந்த 13 வருடங்களில் இயற்கை, ஈ, பேராண்மை மற்றும் புறம்போக்கு என்கின்ற பொதுவுடைமை என மொத்தம் 4 படங்களை மட்டுமே இயக்கியிருக்கிறார். இவரது படங்களில் சமூக அக்கறையும் கலந்தே இருக்கும், என்பது இவரது தனிச்சிறப்பு.
பல ஆண்டுகள் ஆராய்ச்சி
ஜனநாதன் பல ஆண்டுகளாகவே சரித்திரக் கதைகளைப் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டு இருக்கிறார், ஆனால் சரித்திரக்கதையை மக்கள் ஏற்றுக் கொள்வார்களா படம் வெற்றிபெறுமா?என்ற சந்தேகம் அவருக்கு இருந்துள்ளது. தற்போது பாகுபலியின் வெற்றியைப் பார்த்த பின்னர் சரித்திரப் படத்தின் மீது ஜனநாதனுக்கு நம்பிக்கை வந்துள்ளது.
தஞ்சையின் வரலாறு
ஜனநாதன் எடுக்க இருக்கும் சரித்திரத் திரைப்படம் தஞ்சை பெரிய கோயிலைப் பற்றியதாம், தஞ்சை பெரிய கோயில் மற்றும் அதன் உண்மையான வரலாற்றை எடுத்துக் கூறும் படமாக இந்தப் படம் அமையும் என்று கூறி இருக்கிறார். மேலும் தமிழர்களின் உயர்ந்த நாகரீகத்தை உலகுக்கு எடுத்துச் சொல்லும் விதமாக எனது படம் இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
பட்ஜெட் 200 கோடி
படத்தை எடுத்து முடிக்க சில ஆண்டுகள் ஆகும், இந்தப் படத்தின் பட்ஜெட் 200 கோடி வரை இருக்கலாம் என்று கூறியிருக்கிறார். தமிழில் தஞ்சை பெரியகோயிலைப் பற்றிய படம் என்பது கேட்பதற்கே மகிழ்ச்சியாக இருக்கிறது, பாகுபலியின் தாக்கம் பலரின் மனக்கதவுகளைத் திறந்து வருகிறது போல.
வேகமா படத்தை ஆரம்பிங்க சார்..
சரித்திரப் படம்
சமீபத்தில் வெளிவந்து பலரின் பாராட்டைப் பெற்ற பாகுபலி திரைப்படத்தைப் பார்த்த ஜனநாதன் அடுத்ததாக சரித்திரப் பின்னணியை அடிப்படையாகக் கொண்ட, ஒரு படத்தை இயக்கப்போவதாகத் தெரிவித்துள்ளார்.