Don't Miss!
- News எம்பிக்களின் மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா? வீடு முதல் ரயில் பயணம் வரை இலவசம்.. அசரவைக்கும் சலுகைகள்!
- Sports ஒரு பந்துக்கு 12 ரன் அடிக்க பார்க்காதே.. எவ்வளவு முறை சொல்றது? இளம் வீரருக்கு சூர்யகுமார் அட்வைஸ்
- Technology வெறும் ரூ.10,000 விலை.. சூப்பர் பாஸ்ட் 5G மொபைல்.. அசராமல் அடிக்கும் Realme.. எப்போது விற்பனை?
- Finance வெளி ஊர்ல இருக்கீங்களா? நீங்களும் ஓட்டு போடலாம்.. எப்படின்னு பாருங்க!
- Automobiles ஒன்றல்ல, ரெண்டல்ல மொத்தம் 13 ஸ்கூட்டர்களை மாற்று திறனாளி இளைஞர்களை பரிசளித்த நடிகர் ராகவா லாரன்ஸ்..
- Lifestyle கல்லீரலின் மூலைமுடுக்குகளில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற சாப்பிட வேண்டிய உணவுகள்!
- Travel நீங்கள் அடிக்கடி ரயிலில் பயணிப்பவரா – அப்போ இந்திய ரயில்வேயின் இந்த விதிமுறைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ரூ. 40 லட்சம்ப்பு: ரஜினி, கமல் போன்று பெரிய காரியம் செய்த சாய் பல்லவி
ஹைதராபாத்: தான் நடித்த படத்திற்கான சம்பள பாக்கியை வாங்க மறுத்துள்ளார் சாய் பல்லவி.
சாய் பல்லவி நடிப்பில் டிசம்பர் மாதம் இரண்டு படங்கள் ரிலீஸானது. ஒன்று மாரி 2, மற்றொன்று ஷர்வானந்துடன் சேர்ந்து அவர் நடித்த தெலுங்கு படம் படி படி லேச்சு மனசு.
படி படி லேச்சு மனசு எதிர்பார்த்தபடி ஓடவில்லை. இதனால் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
சாய் பல்லவி
படி படி லேச்சு மனசு படத்தில் நடித்த சாய் பல்லவிக்கு முன்பணம் கொடுத்துவிட்டு மீதத் தொகையை பின்னர் தருகிறோம் என்று கூறியிருக்கிறார்கள். இந்நிலையில் படம் ரிலீஸான பிறகு சம்பள பாக்கி ரூ. 40 லட்சத்தை தயாரிப்பாளர் அவரிடம் கொடுக்க அவரோ வாங்க மறுத்துவிட்டாராம்.
படம்
படி படி லேச்சு மனசு படம் ரூ. 22 கோடிக்கு வியாபாரம் செய்யப்பட்ட நிலையில் வெறும் 8 கோடி மட்டும் தான் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தயாரிப்பாளர், வினியோகஸ்தர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் தான் அவர் தனது சம்பளத்தை விட்டுக் கொடுத்துள்ளாராம்.
பாராட்டு
ரூ. 40 லட்சம் சம்பளத்தை சாய் பல்லவி விட்டுக் கொடுத்தது குறித்து அறிந்த டோலிவுட் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் அவரை பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். இந்த பொண்ணுக்கு பெரிய மனசு என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
நல்ல பெயர்
சாய் பல்லவியின் பெயர் தேவையில்லாத விஷயங்களில் அடிபட்டு அவர் திமிர்பிடித்தவர் என்ற பேச்சு கிளம்பியது. இந்நிலையில் அவர் தற்போது செய்துள்ள காரியத்தால் அவரின் நல்ல குணம் திரையுலகினருக்கு தெரிய வந்துள்ளது. முன்பு ரஜினிகாந்த், கமல் ஹாஸன் போன்றோர் படங்கள் தோல்வி அடைந்தால் சம்பளத்தை விட்டுக் கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.