Don't Miss!
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- News திடீர் மாரடைப்பு.. பிரபல தாதா முக்தார் அன்சாரி உயிரிழப்பு.. பதற்றம் - 144 தடை உத்தரவு
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Automobiles பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
அனுஷ்கா- விராட் கோலி காதலை 'புதுப்பித்த' சல்மான் கான்?
மும்பை: அனுஷ்கா சர்மா -விராட் கோலி மீண்டும் தங்கள் காதலை புதுப்பித்ததற்கு, சல்மான் கான் தான் காரணம் எனப் புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
சல்மான் ஒரு காதல் மன்னன் என்றுதானே கேள்விப் பட்டிருக்கிறோம் இதென்ன புதுக்கதை என்று ஆச்சரியமாக உள்ளதா? உங்களால் நம்ப முடியாவிட்டாலும் அதுதான் உண்மை என பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அனுஷ்கா தன்னை விட்டுப் பிரிந்து சென்றபின் பல வழிகளிலும் தங்களது காதலை மீண்டும் புதுப்பிக்க விராட் கோலி முயற்சி செய்தார். ஆனால் அவை அனைத்துமே கிணற்றில் போட்ட கல்லாகி விட்டன.
இதனால் சோகமாக வலம்வந்த விராட் கோலியை தற்போது மீண்டும் ஒருசில கண்டிஷன்களுடன் அனுஷ்கா ஏற்றுக் கொண்டிருக்கிறார். இதில் சுவாரசியம் என்னவென்றால் இவர்கள் காதலை பிரித்ததாகக் கூறப்பட்ட சல்மான் தான் இருவரின் காதலையும் புதுப்பித்து வைத்தாராம்.
சுல்தான் படத்தின் ஹங்கேரியா படப்பிடிப்பில் அனுஷ்காவிற்கு, சல்மான் சிலபல அறிவுரைகளை சொல்லியிருக்கிறார். அதில் முக்கியமானது ''உனது காதல் உண்மையாக இருந்தால் அதனை மீண்டும் தொடர்வாயாக'' என அனுஷ்காவிடம், சல்மான் கூறியது தானாம்.
இதனால் அனுஷ்கா- விராட் காதல் தொடர்வதற்கு வேறு காரணங்கள் இருந்தாலும், சல்மான் தான் முக்கியக் காரணம் என பாலிவுட் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
விராட் -சல்மான் நண்பர்களாக இல்லாவிட்டாலும் கூட, சல்மான் மீது அனுஷ்காவிற்கு மிகப்பெரிய மரியாதை இருப்பது குறிப்பிடத்தக்கது.