Don't Miss!
- Sports என்னை மிரட்டி ஆர்சிபிக்கு விளையாட வைத்தார் கோலி.. உலககோப்பை தோல்வி வலித்தது- கேஎல் ராகுல் பேச்சு
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- News ஜனநாயக கடமை ஆற்ற முதல் ஆளாக வந்த நடிகர் அஜித்.. 30 நிமிடம் முன்பே வந்து காத்திருந்து ஓட்டு போட்டார்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
'குரு' பாலச்சந்தரின் கதையைப் படமாக்கும் 'சிஷ்யன்' சமுத்திரக்கனி
சென்னை: குரு பாலச்சந்தரின் கடைசிக் கதையை படமாக்கும் முயற்சிகளில் அவரது சிஷ்யன் சமுத்திரக்கனி இறங்கியிருக்கிறார்.
கே.பாலச்சந்தரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த சமுத்திரக்கனி இன்று நடிப்பு, இயக்கம் என இரண்டிலுமே வெற்றிக்கொடி நாட்டியிருக்கிறார்.
தற்போது 'அப்பா', 'கிட்ணா' போன்ற படங்களை இயக்கி வரும் சமுத்திரக்கனி அடுத்ததாக பாலச்சந்தர் கடைசியாக எழுதிய கதையை படமாக்கவிருக்கிறார்.
இதுகுறித்து சமுத்திரக்கனி '' இப்படம் எனது குருநாதரின் கனவாக இருந்தது. இப்படத்தை எடுக்க நான் எந்தத் தயாரிப்பாளரிடமும் சென்று நிற்கப்போவதில்லை.
நானே தயாரித்து இப்படத்தை இயக்கவிருக்கிறேன். என்னுடைய அடுத்த படமான 'அப்பா' ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றால் இப்படத்தின் தயாரிப்புப் பணிகளை உடனடியாகத் தொடங்கி விடுவேன்.
'அப்பா' ஒருவேளை வரவேற்பைப் பெறத்தவறினால், இப்படத்திற்கு தேவையான பணத்தை சம்பாதிக்கும் வரையில் இப்படத்தின் பணிகளை நிறுத்தி வைக்கத் திட்டமிட்டுள்ளேன்'' என்று கூறியிருக்கிறார்.
முன்னதாக பாலச்சந்தர் இப்படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்து, ஒரு முக்கியமான கதாபத்திரத்தில் நடித்துத் தரும்படி சமுத்திரக்கனியிடம் கேட்டுக் கொண்டதாக தகவல்கள் கூறுகின்றன.
சமீபத்தில் விசாரணை படத்திற்காக சமுத்திரக்கனி தன்னுடைய முதல் தேசிய விருதைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.