Don't Miss!
- Technology புது ரூல்ஸ்.. தேர்தல் முடிந்ததும் அமல்.. இனி 24 மணி நேரம் தான்.. ரயில் டிக்கெட் சேவையில் 2 பெரிய மாற்றங்கள்!
- Lifestyle கோடையில் பால் கெட்டுப்போகாமல் இருக்க எளிய டிப்ஸ்..!
- News 2019 இல் மோடி ஆதரவு.. 2024 இல் கப்சிப்! 5 ஆண்டு ஆட்சியில் ரஜினி கனவை கண்டுகொள்ளாத பாஜக!
- Sports தீபக் சஹர் காயத்தின் நிலை என்ன? ஷர்துல் தாக்கூருக்கு மீண்டும் வாய்ப்பா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Finance ஒரே நாளில் 4.2 கோடி சம்பாதித்த நாராயணமூர்த்தி-யின் 5 மாத பேரன்.. எப்படி..?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
அவனைத்தான் தேடிகிட்டு இருக்கேன்!- சமுத்திரகனியை டென்ஷனாக்கிய போலி ட்விட்டர்
இன்றைய சூழலில் ட்விட்டர் என்பது கலைஞர்களுக்கும் ரசிகர்களுக்குமான இடைவெளியை குறைத்துவிட்டது. கலைஞர்களும் தங்கள் பட அறிவிப்பு, போஸ்டர் என எல்லாவற்றையுமே அதன் மூலம் தான் வெளியிடுகிறார்கள். ஒரு கட்டத்தில் வெளியாகும் படங்களின் வெற்றி, தோல்வியையே நிர்ணயிக்கும் அளவுக்கு வளர்ந்துவிட்டன சமூக வலைதளங்கள். ஆனால் அவற்றால் பிரபலங்களுக்கு விளையும்
இன்னல்களும் ஏராளம். அந்த வரிசையில் நேற்று மாட்டியவர் சமுத்திரகனி.
சமுத்திரகனி பெயரில் இருந்த ட்விட்டர் அக்கவுண்ட் ஒன்றில் இருந்து ஒரு ட்விட் வெளியானது. அதில், "நான் அமலாபாலுக்கு சப்போர்ட் செய்கிறேன். ஒரு பெண் திருமணத்துக்கு பிறகு நடிப்பது என்பது அவரது விருப்பம். சூர்யாவைப் பார்த்து கற்றுக் கொள்ளவேண்டும்,'' என்று இயக்குநர் விஜய்யை குற்றம் சாட்டி
ஒரு ட்விட்டர் வர, பரபரப்பானது திரையுலகம்.
சமுத்திரகனியிடமே இதுபற்றிக் கேட்டால், "எவன் போட்டான்னு தான் தம்பி தேடிட்டு இருக்கேன். என்னோட ஒரிஜினல் ட்விட்டர் ஐடி வேற. அது போலி,'' என்று விளக்கம் சொன்னார்.
அமலாபால் நடிக்க வந்ததால்தான் நாங்கள் பிரிகிறோம் என்று விஜய் இதுவரை சொல்லவில்லை. எனவேதான் இந்த ட்விட்டர் பரபரப்பை ஏற்படுத்தியது.