Don't Miss!
- News மிளகாய் பொடி ஆயுதம்! ஆந்திராவில் சினிமா ஸ்டைலில்.. மண்டபத்திற்குள் நுழைந்து மணப்பெண்ணை கடத்த முயற்சி
- Automobiles வெறும் 1 ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற மஹிந்திரா கார்! இந்த காருக்கா இப்படி ஒரு நிலைமை?
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Technology சீன வாட்ச்களை சுளுக்கு எடுத்த இந்திய கம்பெனி.. விலை கம்மி ஆனா 8 நாள் பேட்டரி, கொரில்லா கிளாஸ் 3, IP68 இருக்கு!
- Lifestyle உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
- Sports இப்படி தான் சிக்சர் அடிக்கனும்.. இளம் அதிரடி வீரருக்கு சொல்லி கொடுத்த தோனி.. கவனித்த ஜடேஜா
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
திரைத் துளி
மலேசியாவில் இருந்து வந்திருக்கிறார் கீதா. அங்கு வர்த்தக உலகில் கொடி கட்டிப் பறக்கும் குடும்பத்தைச் சேர்ந்தவர். ரேடியோஜாக்கியாக உள்ள இவரது தனது அழகிய குரலால் மலேசியத் தமிழர்கள் மத்தியில் பிரபலமானவர்.
குடும்பத் தொழிலின் நிர்வாகத்தை கவனித்துக் கொண்டே தமிழ் சினிமா மீதும் ஒரு கண் வைத்தபடியே இருந்திருக்கிறார். நீண்டயோசனைக்குப் பின் தைரியமாக களத்தில் குதித்துவிட்டார். அவ்வளவாக பிரபலமாகாத முகங்களை வைத்து ஒரு படத்தைஇவரே தயாரிக்கிறார். படத்தின் பெயர் அறிந்தும் அறியாமலும்.
சினிமா தயாரிப்பில் இறங்குவது இவரது நெடுநாள் கனவாம். இப்போது நிறைவேறுவதில் மகிழ்ச்சியோடு கோடம்பாக்கத்தைசுற்றி வந்து கொண்டிருக்கிறார். கோலிவுட்டும் அங்குள்ள ஆட்களும் புதுசு என்றாலும் சிரித்தே எல்லாவற்றையும் சமாளிக்கிறார்.
இவரை புன்னகைப் பூ கீதா என்று தான் அழைக்கிறார்கள்.
அறிந்தும் அறியாமலும் படத்தின் ஹீரோயின் சம்யுக்ஷா. இவர் தெலுங்கில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ஒன் போர் த்ரீ(ஆங்கிலத்தில் ஐ லவ் யூ என்பதன் சுருக்கம் !) என்ற படத்தில் நடித்தவர். பார்க்க கொஞ்சம் முத்தலாக இருந்தாலும் கவர்ச்சியில்பின்னி எடுத்திருக்கிறார்.
தமிழிலும் இதே வேலையை நன்றாகவே செய்கிறாராம்.
ஹீரோ நவ்தீப். இவர் ஏற்கனவே ஜெய்ராம் என்று சரியாக போணியாகாத ஒரு படத்தில் நடித்தவர் தான். இவரைத் தவிர ஆர்யா,அனில் மேனன், பைவ் ஸ்டார் படத்தில் நடித்த கிருஷ்ணா ஆகியோரும் நடிக்கின்றனர்.
இவர்களைத் தவிர பிரகாஷ் ராஜ் இருக்கிறார்.
இதை யுவன்சங்கர் ராஜா. விஷ்ணுவர்த்தன் கதை எழுத (குறும்பு படத்தை இயக்கியவர்), படத்தை இயக்குவது நீலன்-கோபிநாத்ஆகிய இருவர்.
வழக்கமான இளமை கலாட்டாவை வயலன்ஸ் அண்ட் அழகிய பாடல்களில் சொல்கிறார்களாம். சென்னையில் கடந்த மாதம்படத்தின் துவக்க விழாவுடன் சூட்டிங்கும தொடங்கிவிட்டது.
உயர்ந்த தொழில்நுட்பத்துடன் படத்தை குறுகிய காலத்தில் எடுத்து முடிக்கத் திட்டமிட்டிருக்கிறார்களாம்.
படத்தின் தயாரிப்பாளர் புன்னகைப் பூ கீதாவைப் பார்த்தால் அவரே ஒரு ஹீரோயின் மாதிரித்தான் இருக்கிறார். பேசாம நீங்களேஹீரோயினா நடிக்கலாமே என்று அவரிடம் சொன்னால், அதற்கும் சிரிப்பைத் தான் பதிலாகத் தருகிறார்.
படத்தில் நிறைய வித்தியாசமான முயற்சிகளை செய்து பார்க்க உள்ள இந்த டீம், பாடல் காட்சிகளுக்கு வழக்கம்போல்வெளிநாடுகளுக்குப் பறக்கும் திட்டத்தில் இருக்கிறது.
புதுமுகங்களை வைத்து எடுத்தாலும், சிக்கனம் பார்க்காமல் படத்தை ரிச்சாகக் கொண்டு வரும் முடிவில் இருக்கும் கீதா, பணத்தைகஞ்சத்தனம் இல்லாமல் எடுத்துவிட்டு வருகிறார்.
மலேசியத் தமிழ் பெண்ணின் முதல் பட முயற்சி இது. நல்ல படமா வந்தா சரி!