Don't Miss!
- News ஓட்டு போட சொந்த ஊர் போனவங்களுக்கு வந்த குட்நியூஸ்.. சென்னைக்கு இன்று முன்பதிவில்லா ஸ்பெஷல் ரயில்
- Finance சென்னை லயோலா-வில் படித்த அஜித்.. பெங்களூரிலேயே காஸ்ட்லியான இடத்தை வாங்கியிருக்கிறார்.. யார் இவர்..?
- Technology ஆர்டர் பிச்சிக்கும் பாருங்க.. ரூ.10,000 போதும்.. 108MP கேமரா.. 256GB மெமரி.. வருகிறது itel போன்.. எந்த மாடல்?
- Lifestyle தக்காளி சட்னி செய்யும் போது இந்த ஒரு பொருளை மட்டும் அதிகமா சேர்த்துக்கோங்க.. டேஸ்ட் சூப்பரா இருக்கும்..
- Sports மொத்த பேட்டிங் ஆர்டரும் மாறிப்போச்சு.. ருதுராஜ் செய்த சொதப்பல்.. சிஎஸ்கே தோல்விக்கு காரணம் என்ன?
- Automobiles பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
நேற்று சூர்யா, இன்று விஷால், நாளை யாரோ?... வருத்தத்தில் இயக்குநர்கள்
சென்னை: சண்டக்கோழி 2 படம் குறித்து நடிகர் விஷால் தெரிவித்த கருத்துக்கள் கோலிவுட்டினர் மத்தியில் பெரும் சர்ச்சைகளை எற்படுத்தியிருக்கிறது.
விஷால் வெறுமனே படம் நிறுத்தப்பட்டது என்று மட்டும் கூறாமல் இயக்குநர்கள் இயக்கத்தையும், நடிகர்கள் நடிப்பையும் கவனிக்க வேண்டும் என்று சில அறிவுரைகளையும் வழங்கியிருந்தார்.
முன்னர் இதேபோல சூர்யா நடந்து கொண்ட நிலையில் தற்போது விஷாலும் அவ்வாறு செய்திருப்பது இயக்குநர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
காக்க காக்க
சூர்யாவிற்கு காக்க காக்க, வாரணம் ஆயிரம் என்று 2 திருப்புமுனைப் படங்களைக் கொடுத்தவர் கவுதம் மேனன். தொடர்ந்து 3 வது முறையாக துருவ நட்சத்திரம் படத்தில் இருவரும் இணைவதாக இருந்தது. ஆனால் எதிர்பாராதவிதமாக சூர்யா இந்தப் படத்திலிருந்து விலகுவதாக ஊடகங்கள் முன்னிலையில் அறிவித்தார்.
என்னை அறிந்தால்
துருவ நட்சத்திரம் டிராப் விவகாரத்தால் துவண்டு போன கவுதம் மேனன் விரைவில் சுதாரித்து அஜீத்துடன் இணைந்து என்னை அறிந்தால் படத்தை எடுத்தார். என்னை அறிந்தால் அஜீத்- கவுதம் மேனன் இருவருக்குமே பிரேக் கொடுத்தது. தற்போது சூர்யா நடிக்க மறுத்த துருவ நட்சத்திரம் படத்தை ஜெயம் ரவியை வைத்து கவுதம் மேனன் இயக்கவிருக்கிறார்.
சண்டக்கோழி
செல்லமே படத்தில் அறிமுகமான விஷாலுக்கு, சண்டக்கோழி என்ற ஆக்ஷன் படத்தைக் கொடுத்து அவரது மார்க்கெட்டை உயர்த்தி விட்டவர் லிங்குசாமி. இதனால் மீண்டும் இருவரும் சண்டக்கோழி 2 படத்தில் இணைவதாக இருந்தது. ஆனால் எதிர்பாராதவிதமாக சண்டக்கோழி 2 தள்ளிப்போக அப்படம் கைவிடப்பட்டதாக விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார். மேலும் இயக்குநர் லிங்குசாமி மீது அவர் தயாரிப்பாளர் சங்கத்தில் புகாரும் அளித்தார்.
|
அறிவுரைகள்
வெறுமனே படம் கைவிடப்பட்டது என்று மட்டும் கூறாமல் "சினிமா படைப்பாளிகள் சிலர் தங்கள் பணி மீது முழு கவனம் இல்லாமல் இருப்பதைப் பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது. நடிகர்கள் நடிப்பிலும், இயக்குநர்கள் இயக்கத்திலும் கவனம் செலுத்துவது நல்லது". என்று அவர் மறைமுகமாக சில அறிவுரைகளையும் கூறியிருந்தார்.
லிங்குசாமி
விஷாலின் இந்தத் தாக்குதல் மற்றும் அறிவுரைகள் கோலிவுட் இயக்குநர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு படம் ஆரம்பிப்பது மற்றும் நின்று போவது ஆகியவை சாதாரண நிகழ்வுகள்தான். ஆனால் அதைப்பற்றி விஷால் வெளிப்படையாக அறிவித்தது மட்டுமல்லாமல் இயக்குநர்கள் குறித்தும் கூறியிருப்பது இயக்குநர்கள் பலரின் மத்தியிலும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறதாம். இந்த விவகாரத்தில் இயக்குநர் லிங்குசாமி எந்தக் கருத்தையும் கூற விரும்பவில்லை அப்படம் கைவிடப்பட்டது உண்மைதான் என்று கூறியிருக்கிறார்.