இஷ்டத்துக்கு விமர்சனம் எழுதக் கூடாது... வாரிசு கண்டிப்பா 100 நாட்கள் ஓடும்: சரத்குமார் அதிரடி

சென்னை: விஜய் நடிப்பில் தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவான வாரிசு திரைப்படம் கடந்த வாரம் 11ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

உலகம் முழுவதும் வெளியான வாரிசு திரைப்படத்துக்கு அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

கலவையான விமர்சனங்கள் கிடைத்த வாரிசு முதல் வாரத்தில் மொத்தம் 210 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில், சென்னையில் நடந்த வாரிசு சக்சஸ் மீட்டில் பேசிய சரத்குமார், சினிமா விமர்சகர்களுக்கு முக்கியமான வேண்டுகோள் வைத்துள்ளார்.

 வாரிசு சக்சஸ் மீட்

வாரிசு சக்சஸ் மீட்

பீஸ்ட்டை தொடர்ந்து விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் கடந்த வாரம் 11ம் தேதி ரிலீஸானது. பொங்கல் விருந்தாக வந்த இந்தப் படத்தில் விஜய் பீஸ்ட் மோடில் நடித்துள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஸ்டைல், டான்ஸ், ஆக்‌ஷன், காமெடி, சென்டிமெண்ட் என அனைத்து ஏரியாவிலும் வழக்கமான டிரேட் மார்க் விஜய்யை பார்க்க முடிந்தது என கமெண்ட்ஸ்கள் பறக்கின்றன. இந்நிலையில், வரிசு படத்தின் சக்சஸ் மீட் சென்னையில் நடைபெற்றது.

 சரத்குமார் நம்பிக்கை

சரத்குமார் நம்பிக்கை

வாரிசு படத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். முதன்முறையாக விஜய்யுடன் இணைந்த சரத்குமார், அவருக்கு அப்பாவாக நடித்துள்ளார். தமிழில் வாரிசு, தெலுங்கில் வாரிசுடு என்ற டைட்டிலில் வெளியான இந்தப் படம், இதுவரை 210 கோடி வசூலித்துள்ளதாக படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது. இதனால் மேலும் இந்தப் படத்தின் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், வாரிசு திரையரங்குகளில் கண்டிப்பாக 100 நாட்கள் ஓடும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 விமர்சகர்களுக்கு வேண்டுகோள்

விமர்சகர்களுக்கு வேண்டுகோள்

வாரிசு படத்தின் சக்சஸ் மீட் சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர் வம்ஷி பைடிப்பள்ளி, சரத்குமார், ஷாம் உள்ளிட்ட வாரிசு படக்குழுவினர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய சரத்குமார் வாரிசு கண்டிப்பாக திரையரங்குகளில் 100 நாட்கள் ஓடும் எனக் கூறினார். மேலும், தரமான படங்களுக்கு அழகாக விமர்சனம் எழுதுங்கள். ரசிகர்களே படம் பார்த்து முடிவு செய்துகொள்ளட்டும். உங்களின் கருத்துகளை அவர்கள் மீது திணிக்காதீர்கள் என சினிமா விமர்சகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 எப்போதும் அதிரடி தான்

எப்போதும் அதிரடி தான்

ஏற்கனவே வாரிசு இசை வெளியீட்டு விழாவில் விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என பேசி பரபரப்பை உண்டாக்கினார். சரத்குமாரின் இந்த கருத்து சோஷியல் மீடியாக்களில் வைரலானதுடன், ரசிகர்களிடமும் விவாதத்தை ஏற்படுத்தியது. ரஜினிகாந்த் ஃபீல்டில் இருக்கும் போதே விஜய் தான் சூப்பர் ஸ்டார் என எப்படி சொல்லலாம் என ரஜினி ரசிகர்கள் கொதித்தெழுந்தனர். இதுகுறித்து பின்னர் அவர் விளக்கமும் கொடுத்திருந்தார். இந்நிலையில், தற்போது சினிமா விமர்சனம் குறித்தும் அதிரடியாக கருத்து கூறியுள்ளது வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X