Don't Miss!
- Sports என்னை மிரட்டி ஆர்சிபிக்கு விளையாட வைத்தார் கோலி.. உலககோப்பை தோல்வி வலித்தது- கேஎல் ராகுல் பேச்சு
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- News ஜனநாயக கடமை ஆற்ற முதல் ஆளாக வந்த நடிகர் அஜித்.. 30 நிமிடம் முன்பே வந்து காத்திருந்து ஓட்டு போட்டார்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
தயாரிப்பாளர் சங்கம் Vs பெப்சி: சரத்குமார் சமரச முயற்சி!
இருதரப்புமே தங்கள் நிலையில் தீவிரமாக உள்ளனர். சம்பளம் கொடுக்கிற முதலாளிகளையே மிரட்டுவதா என்ற நினைப்பில் தயாரிப்பாளர்களும், தொழிலாளர்கள் இல்லாமல் சினிமாவா என்ற கோபத்தில் தொழிலாளர்களும் முரண்டுபிடித்துக் கொண்டிருப்பதால் விவகாரம் முடிகிறமாதிரி தெரியவில்லை.
எங்கு்ம் இல்லாத விசித்திரமாக, முதலாளிகளே தொழிலாளர் அமைப்பை உருவாக்கும் முயற்சியை தமிழ் சினிமாவில் பார்க்க முடிகிறது. இருக்கிற அமைப்பை பலவீனப்படுத்துவது இதன் நேரடி காரணம்.
ஏப்ரல் 7-ம் தேதி முதல் முழு ஸ்ட்ரைக் என பெப்சி அறிவிக்க, அதற்குப் போட்டியாக, வரும் 7-ம் தேதியிலிருந்து அனைத்து வேலைகளையும் முழுவீச்சில் ஆரம்பிப்போம் என தயாரிப்பாளர்களும் அறிவித்துள்ளனர்.
இந்த ஏட்டிக்குப் போட்டி நிலையை சுமூகமாக்க இயக்குநர் கே பாலச்சந்தர் ஏற்கெனவே முயன்றார். ஆனால் அதில் என்ன பலன் கிடைத்தது என்று தெரியவில்லை.
இந்த நிலையில், நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் சமரச முயற்சியில் இறங்கியுள்ளார்.
தயாரிப்பாளர் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் பெப்சி அமைப்புடன் பேசி, விரைவில் அறிக்கை வெளியிடப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
சண்டை ஓய்ந்தால் சரி!