Don't Miss!
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- News நில அளவை சர்வே.. DTCP ஒப்பந்தபுள்ளி தகுதி வரம்பில் திருத்தம் தேவை: முதல்வருக்கு ரியல் எஸ்டேட் கடிதம்
- Automobiles இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
தமிழக வெள்ள நிவாரணத்திற்கு நடிகை சரோஜாதேவி ரூ 5 லட்சம் நன்கொடை
சென்னை: தனது பிறந்தநாளை முன்னிட்டு நடிகை சரோஜாதேவி ரூ 5 லட்சத்தை தமிழக வெள்ள நிவாரண நிதியாக அளித்திருக்கிறார்.
பழம்பெரும் நடிகை சரோஜாதேவி தற்போது பெங்களூரில் வசித்து வருகிறார். இவர் நேற்று தனது 78 வது பிறந்தநாளில் அடியெடுத்து வைத்தார்.
தனது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று அவர் சென்னைக்கு வந்து நடிகர் சங்க நிர்வாகிகளை சந்தித்தார். நடிகர் சங்கத் தலைவர் நாசர், சிவகுமார், மனோபாலா மற்றும் குட்டி பத்மினி ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.
சரோஜாதேவியின் பிறந்தநாள் என்பதால் அவருக்கு பூங்கொத்து கொடுத்து நடிகர் சங்க நிர்வாகிகள் வாழ்த்தினர். மேலும் கேக் வெட்டியும் அவரது பிறந்தநாளை விமரிசையாக கொண்டாடினர்.
இதனைத் தொடர்ந்து தமிழக வெள்ள நிவாரணத்திற்கு ரூ 5 லட்சத்தை நன்கொடையாக சரோஜாதேவி வழங்கினார். இதனை நடிகர் சங்கத் தலைவர் நாசர் பெற்றுக் கொண்டார்.
நடிகர் சங்கம் மூலம் சேருகின்ற இந்தத் தொகையானது முதலமைச்சர் பொது நிவாரண நிதியின் கீழ் ஒப்படைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.