Don't Miss!
- Automobiles ரேஸ் டிராக்கை தெறிக்கவிட்ட பைக் ரேஸர்கள்!!
- Finance ஸ்மால்கேப் முதலீட்டாளர்கள் காட்டில் மழை.. மொத்தம் 26 லட்சம் கோடி லாபமாம்..!!
- News ‘ஒலி வாங்கி’ கட்சி சின்னத்தை தமிழில் சொன்னால் மக்களுக்கு புரியவில்லை.. நாம் தமிழர் சீமான் வேதனை
- Sports விளையாட்டு காட்றீங்களா? களத்திலேயே ஹர்திக், ரோகித்தை திட்டிய ஆகாஷ் அம்பானி.. சமாதானம் செய்த சச்சின்
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
காமராஜரின் உதவியாளர் வேடத்தில் நடித்த சசி பெருமாள்! - இயக்குநர் பாலகிருஷ்ணன் அஞ்சலி
‘காமராஜ்' திரைப்படத்தில் காமராஜரின் உதவியாளர் வைரவன் வேடத்தில் நடித்துள்ள காந்தியவாதி சசி பெருமாள் மறைவுக்கு அப்படத்தின் இயக்குநர் அ பாலகிருஷ்ணன் அஞ்சலி செலுத்தினார்.
இயக்குநர் பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "2004ல் ‘காமராஜ்' திரைப்படம் வெளியான பின்பு பெருந்தலைவரைப் பற்றி நெகிழச் செய்யும் பல தகவல்கள் எங்களை நோக்கி வந்தவண்ணம் இருந்தன. அவைகளை ‘காமராஜ்' திரைப்படத்தை டிஜிட்டல் மயமாக்கும் போது இணைக்க திட்டமிட்டிருந்தோம்.
அவைகளில் முக்கியமானது பெருந்தலைவர் காமராஜர் இறந்தபின்பு அவரது சொத்துமதிப்பை கணக்கிட்டு ரூ110 மற்றும் சில வேட்டி சட்டைகள், அவர் பரம ஏழையாக வாழ்ந்துள்ளார் என்பது வரலாறு. இக்காட்சியில் சொத்து மதிப்பை கணக்கிடும் அதிகாரியாக சமுத்திரகனி நடித்தார்.
பெருந்தலைவரின் உதவியாளராக 25 ஆண்டுகள் இருந்த வைரவன் வேடத்தில் நடிக்க பொருத்தமான, மனிதரை தேடினோம். ஏனென்றால் எங்களிடம் பழகிய வைரவன் அவர்கள் பெருந்தலைவரின் நிழலில் வாழ்ந்து ஒரு தேசத் தொண்டராக, யாரிடமும் எந்த உதவியையும் எதிர்பார்க்காதவராக இருந்தார்.
அத்தகைய மனிதருக்கு சிறப்பு சேர்க்கும் விதமாக சசிபெருமாள், வைரவன் வேடத்தில் நடித்தார். அவரை அணுகியதும் எந்த தயக்கமும் இன்றி, தனக்கு கிடைத்த பாக்கியமாக நடித்துக் கொடுத்தார். அவர் தோன்றியுள்ள ஒரே திரைப்படமும் இது தான்.
அவரது திடீர் மறைவு எனக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. அவரது புனிதமான நோக்கம் வெற்றியடையும் என்பதில் எனக்கு எந்த ஐயமுமில்லை.
எனது மனமார்ந்த இரங்கலை பதிவு செய்கிறேன்.
-இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.