சசிகலாவுக்கு சிறை: கடவுள் இருக்கான் குமாரு- ட்வீட்டும் கோலிவுட்
சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்துள்ளது குறித்து கோலிவுட் பிரபலங்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, தினகரன் ஆகியோருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. சசிகலா உள்ளிட்டோர் உடனடியாக சரணடைய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது குறித்து தமிழ் திரையுலகினர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
பார்த்திபன்
சட்டம் என் கையில்"என பணம் மார்தட்டிக்கொள்ளவிடாமல்,
சட்டம் சத்தியத்தின் பக்கமே என போராடிய நீதியின் ஆச்சாரியார்களுக்கு வணக்கமும் நன்றியும்
குஷ்பு
தமிழக மக்களுக்கு உச்ச நீதிமன்றம் சிறந்த காதலர் தின பரிசை அளித்துள்ளது..மக்கள் தற்போது பயம் இல்லாமல் வாழலாம் என ட்வீட்டியுள்ளார் குஷ்பு.
பிரகாஷ் ராஜ்
#judgement #TnPolitics ..இது முடிவு அல்ல... சுத்தப்படுத்துதல் தற்போது தான் துவங்கியுள்ளது.. இன்னும் தொடரும் என நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.
ஷான் ரோல்டன்
ஆண்டவன் நல்லவங்கள சோதிப்பான். கை விடமாட்டான். கெட்டவங்களுக்கு நிறைய குடுப்பான். ஆனா, கைவிட்டுடுவான் - @superstarrajini
தயா அழகிரி
ஆமாம், நான்கு வருஷம் டா
காயத்ரி ரகுராம்
கடவுள் இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











