மீண்டும் நடிக்க வந்த நெப்போலியன் கையிலும் அரிவாளை கொடுத்த கிடாரி
செல்வராகவனே தன் பாணியை விட்டுவிட்டு பேய் படமும், சந்தானத்தை ஹீரோவாக வைத்தும் படமும் எடுக்க தொடங்கி விட்டார். ஆனால் இந்த ச்சிகுமார் தன்னுடைய ஃபார்முலாவை விட்டு வெளியே வருவேனா.. என்கிறார். இது நேற்று வெளியான கிடாரி ட்ரெய்லரை பார்த்தவர்கள் சொன்னது.

அந்த அளவுக்கு மீண்டும் அரிவாள், ரத்தம், பழிவாங்கல் ஆகியவற்றைத்தான் கையில் எடுத்திருக்கிறார். பட்த்தில் மெயின் வில்லனாக வேல ராமமூர்த்தி வருகிறார்.
போதாதகுறைக்கு நெடுநாள் கழித்து இதில் ரீ எண்ட்ரி ஆகும் நெப்போலியன் கையிலும் அரிவாளை கொடுத்து வெட்ட வைத்திருக்கிறார்கள்.
சசி கையில் இருந்து அரிவாளை எந்த புண்ணியவான் வந்து பிடுங்கப்போறாரோ...?
Comments


Click it and Unblock the Notifications