Don't Miss!
- News மாலையில் திடீரென வாக்குச்சாவடியில் குவிந்த 1000 பேர்.. மரக்காணம் அருகே பரபரப்பு.. என்ன நடந்தது!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Finance ப்ளே ஸ்கூல் பையனுக்கு ரூ. 4,30,000 கட்டணமா.. ட்ரெண்ட் ஆகும் தந்தையின் கதறல் போஸ்ட்!
- Lifestyle தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்வது பாதுகாப்பானது தெரியுமா? இத்தனை ஸ்பூனுக்கு மேல தெரியாம கூட சாப்பிடாதீங்க...
- Technology யாருமே எதிர்பார்க்கல.. 8ஜிபி ரேம்.. 50எம்பி கேமரா.. புதிய Samsung 5ஜி மாடல் அறிமுகம்.. என்ன விலை?
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
உத்தா பஞ்சாப் குழுவினரின் சென்சாருக்கு எதிரான வெற்றி நம் அனைவருக்கும் பொதுவானது - சசிக்குமார்
சென்னை: ''சென்சாருக்கு எதிரான உத்தா பஞ்சாப் குழுவினரின் வெற்றி நம் அனைவருக்கும் பொதுவானது'' என நடிகர் சசிக்குமார் கூறியிருக்கிறார்.
பாலிவுட் படமான உத்தா பஞ்சாப் தணிக்கையில் 89 இடங்களில் வெட்டுப்பட கோபமடைந்த படத்தின் தயாரிப்பாளர் அனுராக் காஷ்யப் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருக்கும்போதே 13 வெட்டுகளுடன் தணிக்கைக் குழுவினர் இப்படத்துக்கு ஏ சான்றிதழ் அளித்தனர்.
ஆனால் இன்னும் பழைய பாட்டியாக இல்லாமல் காலத்திற்கு ஏற்றவாறு மாறுங்கள் என்று சென்சாருக்கு அறிவுரை கூறிய உயர் நீதிமன்றம் இப்படத்தின் ஒரு காட்சியை மட்டும் நீக்குமாறு தீர்ப்புக் கூறியது.
இதனால் உத்தா பஞ்சாப் படக்குழுவுக்கு நாடு முழுவதும் உள்ள படைப்பாளிகள் தங்கள் வாழ்த்துகளைக் கூறிவருகின்றனர். இந்த வரிசையில் நடிகர் சசிக்குமாரும் இணைந்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் ''அனுராக் காஷ்யப்! தணிக்கை வாரியத்துக்கு எதிரான உங்களின் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி உங்களுடையது மட்டுமல்ல, எங்களுடையதும் தான்'' என்று தெரிவித்திருக்கிறார்.
சசிக்குமார் நடித்து வரும் கிடாரி படத்தின் 3 வது கட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.