Don't Miss!
- News வரிசையில் நின்று வாக்களித்தார் எடப்பாடி பழனிசாமி.. ஓட்டு போட்ட பின்னர் வைத்த முக்கிய கோரிக்கை!
- Sports என்னை மிரட்டி ஆர்சிபிக்கு விளையாட வைத்தார் கோலி.. உலககோப்பை தோல்வி வலித்தது- கேஎல் ராகுல் பேச்சு
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சவாலே சமாளி... இணையத்தில் திருட்டுத்தனமாக வெளியான இசை.. போலீசில் புகார்!
சென்னை: சவாலே சமாளி' திரைப்பட பாடல்களை இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் கவிதா பாண்டியன், சென்னை மாநகர காவல் ஆணையரிடம் திங்கள்கிழமை மனு கொடுத்தார்.
அந்த மனுவில், "எங்களது திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் 'சவாலே சமாளி' என்ற திரைப்படத்தைத் தயாரித்து வருகிறோம். இந்தத் திரைப்படத்தை இயக்குநர் சத்யசிவா இயக்குகிறார், தமன் இசையமைத்துள்ளார்.
நடிகர் நாசர், அசோக் செல்வன், ஜெகன், நடிகை பிந்துமாதவி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
இந்தத் திரைப்படத்தின் பாடல்களை வெளியிடுவற்குரிய உரிமத்தை, ஒரு தனியார் நிறுவனத்துக்கு வழங்கியுள்ளோம்.
இந்த நிலையில் அந்த திரைப்படத்தின் பாடல்களை சில மர்ம நபர்கள், திருட்டுத்தனமாக இணைய தளத்தில் வெளியிட்டுள்ளனர். இதனால் எங்களது நிறுவனத்துக்குப் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதில் ஈடுபட்டுள்ள நபர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இனிமேலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க காவல்துறை தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று குறிப்பிடப்பட்டுள்ளது.