Don't Miss!
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
திரைத் துளி
முன்னணி நடிகைகளான சிம்ரன், ஜோதிகா, சினேகா போன்றோருக்கு பின்னணி குரல் கொடுத்து வரும் சவீதாராதாகிருஷ்ணனுக்கு பிப்ரவரி 3ம் தேதி சென்னையில் திருமணம் நடைபெறுகிறது.
சிம்ரன்,ஜோதிகாவுக்கு எப்போது திருமணம் நடக்கிறதோ, ஆனால் அவர்களின் குரலாக இருந்து வரும் சவீதாவுக்குதிருமணம் நிச்சயமாகியுள்ளது.
வாலி படத்தில் சிம்ரனின் நடிப்பு பெருமளவில் பேசப்பட அவருக்குப் பின்னணி குரல் கொடுத்த சவீதா முக்கியக்காரணமாவார். அதேபோல, ஜோதிகா பிரபலமடைவதற்கும் இவரது குரலே காரணம். நடிகைகளுக்கு இணையாகஇவரும் பிரபலமும், புகழும் அடைந்தார்.
நந்திதா தாஸ், திரிஷா, சினேகா, ஷார்மி, ரதி என பலருக்கும் குரல் கொடுத்துள்ளார் சவீதா.
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இவர்சிறந்த பின்னணி கலைஞருக்கான ஆந்திர அரசின் நந்தி விருது பெற்றவர்.
இவருக்கும், அமெரிக்காவில் பணியாற்றி வரும் பாலமுருகன் என்பவருக்கும் திருமணம் நிச்சயமாகியுள்ளது.
வரும் பிப்ரவரி மாதம் 3ம் தேதி சென்னையில் திருமணம் நடக்கிறது.