பாதியில் நின்ற படகுப் பயணம்... சூர்யாவைக் காப்பாற்றிய சியாட்டல் போலீசார்!
சியாட்டல்: அமெரிக்கா சென்றுள்ள சூர்யா, பசிபிக் கடலில் படகுப் பயணம் செய்தபோது பாதியில் சிக்கிக் கொண்டார். அவரை சியாட்டல் போலீசார் காப்பாற்றினர்.
நடிகர் சூர்யா தனது அகரம் அறக்கட்டளைக்காக நிதி திரட்ட அமெரிக்கா சென்றுள்ளார். பல்வேறு நகரங்களில் அவர் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நிதி திரட்டி வருகிறார்.

நேற்று அவர் சியாட்டல் நகருக்கு வந்தார். நிதி திரட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் முன் சியாட்டல் பசிபிக் கடலில் ஒரு அதிவேக படகுப் பயணம் செய்தார். அப்போது அவரது படகு நடுக்கடலில் நின்றுவிட்டது. உடனடியாக சியாட்டல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் மாற்றுப் படகு கொண்டுவந்து சூர்யாவை மீட்டுச் சென்றனர்.


Click it and Unblock the Notifications











