ஆயிரத்தில் ஒருவன் படத்தை மெகா பட்ஜெட் படமாக காட்ட பொய் சொன்னோம்.. வருத்தப்படும் செல்வராகவன்!

சென்னை: ஆயிரத்தில் ஒருவன் படத்தை மெகா பட்ஜெட் படமாக காட்ட பொய் சொன்னதாக இயக்குநர் செல்வராகவன் வருத்தப்பட்டுள்ளார்.

காதல் கொண்டேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் செல்வராகவன். இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மகனான செல்வராகவன், ஏராளமான வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார்.

7ஜி ரெய்ன்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம் , என்ஜிகே, நெஞ்சம் மறப்பதில்லை உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.

கீர்த்தி சுரேஷுடன் சாணிக் காயிதம்

கீர்த்தி சுரேஷுடன் சாணிக் காயிதம்

இயக்குநராக மட்டுமின்றி எழுத்தாளராகவும் தயாரிப்பாளராகவும் உள்ளார் செல்வராகவன். தற்போது சாணிக் காயிதம் என்ற படத்திலும் நடித்து வருகிறார் இயக்குநர் செல்வராகவன். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகும் சாணிக் காயிதம் படத்தில் கீர்த்தி சுரேஷுடன் இணைந்து நடிக்கிறார் செல்வராகவன்.

சாணிக் காயிதம் படப்பிடிப்பு நிறைவு

சாணிக் காயிதம் படப்பிடிப்பு நிறைவு

கடந்த வருடம் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானாது. ஆனால் கொரோனா அச்சுறுத்தல் உள்ளிட்ட காரணங்களால் இந்த வருடம் பிப்ரவரி மாதம் தான் படப்பிடிப்பு தொடங்கியது.

இடையில் லாக்டவுன் காரணமா இந்தப் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு அண்மையில் மீண்டும் தொடங்கி தற்போது நிறைவடைந்துள்ளது.

விஜய்யின் பீஸ்ட் படத்தில் செல்வராகவன்

விஜய்யின் பீஸ்ட் படத்தில் செல்வராகவன்

படப்பிடிப்பு நிறைவடைந்த போட்டோக்கள் இணையத்தில் வெளியானது. படப்பிடிப்பை முடித்த கையோடு டப்பிங் பணியில் இறங்கியுள்ளார் செல்வராகவன் அந்த போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி தெறிக்கவிட்டது. இதனிடையே நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்திலும் செல்வராகவன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரகசியத்தை சொன்ன செல்வ ராகவன்

ரகசியத்தை சொன்ன செல்வ ராகவன்

இந்நிலையில் இயக்குநர் செல்வராகவன் தான் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் படம் குறித்த ரகசியத்தை பகிர்ந்துள்ளார். ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியானது. இந்தப் படத்தில் நடிகர் கார்த்தி, ரீமா சென், ஆண்ட்ரியா, பார்த்திபன் உட்பட பலர் நடித்திருந்தனர்.

சோழர் ஆட்சியின் கடைசிக் கட்டத்தில்

சோழர் ஆட்சியின் கடைசிக் கட்டத்தில்

இந்தப் படம் சோழர்களுக்கும் பாண்டியர்களுக்கும் இடையிலான பிரச்சனையை பேசும் வரலாற்று படமாக இருந்தது. சோழர் ஆட்சியின் கடைசிக்கட்டத்தில் படம் தொடங்குகிறது. பாண்டியர் சோழரோடு போரிட்டு, பாண்டியரின் குலதெய்வச் சிலையையும், ஒரு சோழ இளவரசனையும் வியட்னாம் அருகிலுள்ள ஓர் தீவுக்கு அனுப்பி வைத்திருப்பார்கள்.

தேடிச் செல்லும் ஆண்ட்ரியாவின் அப்பா

தேடிச் செல்லும் ஆண்ட்ரியாவின் அப்பா

தொல்பொருள் ஆராய்ச்சியாளரான ஆண்ட்ரியாவின் அப்பா அதை தேடிச் செல்வார். ஆனால் அவர் திரும்பி வராததால் அவரை தேடி ஒரு குழுவினர் செல்வார்கள். அதில் ரீமா சென், ஆண்ட்ரியா, மூட்டை தூக்கும் தொழிலாளியான கார்த்தி ஆகியோர் இடம் பெற்றிருப்பார்கள்.

தீவுக்கு செல்லும் மூன்று பேர்

தீவுக்கு செல்லும் மூன்று பேர்

அவர்கள் அந்த தீவுக்கு செல்லும் பயணத்தின் ஒவ்வொரு கட்டமும் திகில் நிறைந்ததாக இருக்கும். ஒரு வழியாக சோழர்கள் வசிக்கும் இடத்திற்கு ரீமாசென், ஆண்ட்ரியா மற்றும் கார்த்தி ஆகிய மூவரும் சென்று விடுவார்கள். ஆனால் அவர்கள் பேசும் மொழியை புரிந்து கொள்ள முடியாத பார்த்திபன் தலைமையிலான சோழர்கள் அவர்களை கொல்ல முயற்சிப்பார்கள்.

ரீமா சென் பாண்டிய குல பெண்

ரீமா சென் பாண்டிய குல பெண்

அப்போது சோழர் வம்சத்தை சேர்ந்தவரை போல் பேசத் தொடங்குவார் ரீமா சென். உண்மையில் ரீமா சென் பாண்டிய குல பெண். தங்களின் குல தெய்வத்தை மீட்டு செல்வதற்காக சோழர் வம்சம் போல் நடித்து தனது சோழர்கள் குடிக்கும் தண்ணீரில் விஷத்தை கலந்து விடுவார். மேலும் பாண்டிய குலத்தை சேர்ந்தவர்களுக்கு தகவல் தெரிவித்து நவீன ஆயுதங்களுடன் அவர்களை வரவழைத்து சோழர் குலத்தையே அழிக்கும் முயற்சியில் இறங்குவார்.

கார்த்தியும் ஒரு சிறுவனும் மட்டுமே

கார்த்தியும் ஒரு சிறுவனும் மட்டுமே

இதில் கடைசியாக கார்த்தியும் ஒரு சிறுவனும் மட்டுமே தப்பிப்பார்கள். இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. அதேநேரத்தில் எதிர்பார்த்த அளவுக்கு வசூலை குவிக்கவில்லை என்றும் பேசப்பட்டது. இந்நிலையில் 11 ஆண்டுகள் கழித்து படம் தொடர்பாக சொன்ன ஒரு பொய்யை தற்போது கூறி வருத்தப்பட்டுள்ளார் படத்தின் இயக்குநரான செல்வராகவன்.

என்ன ஒரு முட்டாள்தனம்

என்ன ஒரு முட்டாள்தனம்

இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் உண்மையான பட்ஜெட் 18 கோடி ரூபாய் தான். ஆனால் படத்திற்கு மெகா பட்ஜெட் படம் என்ற ஹைப்பை கொடுக்க 32 கோடி என கூறியதாக தெரிவித்துள்ளார். மேலும் என்ன ஒரு முட்டாள்தனம் என குறிப்பிட்டுள்ள செல்வராகவன், படம் உண்மையான பட்ஜெட்டை வசூலித்த போதும் அவ்ரேஜ் படம் என்றே குறிப்பிடப்படுகிறது.

எக்ஸ்ட்ரா கட்ட பிளான் பண்றாங்களா?

எக்ஸ்ட்ரா கட்ட பிளான் பண்றாங்களா?

முரண்பாடுகள் எதுவாக இருந்தாலும் பொய் சொல்லக் கூடாது என்பதை கற்றுக்கொண்டேன் என்றும் பதிவிட்டுள்ளார். செல்வராகவனின் இந்த பதிவை பார்த்த இந்த நெட்டிசன், என்ன தலிவா.. பீஸ்ட் படத்துல இந்த மாதிரி எக்ஸ்ட்ரா கட்ட பிளான் பண்றாங்களா? அதை பாத்துட்டு மனசாட்சி படி உண்மைய சொல்லிட்டியா என கேட்டுள்ளார்.

புத்திசாலிதனத்தை காண காத்திருக்கிறோம்

புத்திசாலிதனத்தை காண காத்திருக்கிறோம்

மற்றொரு ரசிகரான இவர், தலைவா பீஸ்ட் படத்தில் சில காட்சிகளை டைரக்ட் செய்யுங்கள் உங்களின் புத்திசாலிதனத்தை காண காத்திருக்கிறோம் என பதிவிட்டுள்ளார்.

என்ன மனுஷன்யா உண்மைய ஒத்துக்கிட்டாரு

என்ன மனுஷன்யா உண்மைய ஒத்துக்கிட்டாரு

செல்வராகவனின் பதிவை பார்த்த இந்த நெட்டிசனான இவர் ச்ச என்ன மனுஷன்யா உண்மைய ஒத்துக்கிட்டாரு.. 400 கோடி, 500 கோடினு சொல்லுறவங்க கத்துக்கணும்யா கத்துக்கணும் என யாரையோ சாடியுள்ளார்.

தமிழ் சினிமா கொண்டாட வேண்டிய திரைப்படம்

தமிழ் சினிமா கொண்டாட வேண்டிய திரைப்படம்

மற்றொரு நெட்டிசனான இவர் பாகுபலி போன்ற பிரம்மாண்ட திரைப்படத்தை ஒப்பிடும்போது ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் சிறந்த கதை களம் கண்ட திரைப்படம். தமிழ் சினிமா கொண்ட வேண்டிய திரைப்படம். இந்தக் கதையை கமல் போன்ற ஜாம்பவான் இயக்குனர்கள் இயக்கி இருந்தால் பல விருதுகள் குவித்திருக்கும்.. என கூறியுள்ளார்.

காசு செலுத்தி வாங்கப்படுகின்றதா?

காசு செலுத்தி வாங்கப்படுகின்றதா?

மறறொரு ரசிகரான இவர் அப்போ விருதுகள் திறமைகளுக்கு வழங்கப்படுவதில்லை காசு செலுத்தி வாங்கப்படுகின்றதா???? என கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிர்ச்சியும் வருத்தமும் அடைகிறேன்

அதிர்ச்சியும் வருத்தமும் அடைகிறேன்

சினிமாவில் தவறான பணவீக்கம் உள்ளது என்பதை உங்கள் ட்வீட் நிரூபிக்கிறது. அதாவது, உண்மையான மதிப்புகளுக்கு பதிலாக தவறான மதிப்புகளை முன்னிறுத்துவது. அதைப் பற்றி அறிந்ததும் அதிர்ச்சியும் வருத்தமும் அடைகிறேன். போலித்தனத்தை என்று சினிமா கைவிடுகிறதோ அன்றுதான் உருப்படும். முன்னேற்ற பாதையில் செல்லும் என கடிந்துள்ளார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X