Don't Miss!
- Sports
தோனி தான் எனக்கு ஃபர்ஸ்ட்.. அப்புறம் தான் நாடு.. சின்ன தல சுரேஷ் ரெய்னாவின் நெகிழ்ச்சி பேச்சு
- News
பிராமணர் என்பதற்காகவே வெறுப்பதா? இதுவும் தீண்டாமைதான் - இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் ஆதங்கம்
- Lifestyle
சுக்கிர பெயர்ச்சியால் பிப்ரவரி 15 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு லாபகரமான காலமாக இருக்கப் போகுது...
- Automobiles
இது செம காராச்சே! இதோட விலையை திடீர்ன்னு இவ்வளவு கூட்டிட்டாங்க! காரணம் இது தான்!
- Finance
7வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்..! விரைவில் குட் நியூஸ்
- Technology
பார்வை இழந்தவர்களுக்கான புது சூப்பர் Smartwatch.! இந்தியாவில் உருவான அசத்தல் கண்டுபிடிப்பு.!
- Travel
இனி திருப்பதியில் உண்டியல் பணம் கணக்கிடும் போது கண்ணாடி சுவர்கள் வழியே நீங்களும் பார்க்கலாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
யுவன் பற்றி செல்வராகவன் சொன்ன அந்த ஒரு வார்த்தை...குஷியான ரசிகர்கள்
சென்னை : இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா பற்றி ஒரே வார்த்தையில் சிம்பிளாக, டைரக்டர் செல்வராகவன் சொன்ன ஒற்றை வார்த்தை ரசிகர்களை கவர்ந்தது. செம குஷியான ரசிகர்கள், கைதட்டல், விசில் என பட்டைகிளப்பி விட்டனர்.
சரத்குமார் நடித்த அரவிந்தன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர் யுவன்சங்கர் ராஜா. இளையராஜாவின் மூத்த மகனான யுவன், இசையமைப்பாளர், பின்னணி பாடகர், தயாரிப்பாளர் என தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்து வருகிறார். இதுவரை 100 க்கும் அதிகமான படங்களில் யுவன் பணியாற்றி விட்டார்.
“நானே
வருவேன்
“
கதையை
நான்
எழுதவில்லை…
ரகசியத்தை
சொன்ன
செல்வராகவன்
!

யுவனின் 25 ஆண்டுகள்
பிஜிஎம் கிங் என ரசிகர்களாலும், தமிழ் சினிமா துறையினராலும் புகழப்படும் யுவன், 1996 ம் ஆண்டு தனது 16வது வயதில் தனது திரையுலக இசை பயணத்தை துவக்கினார். அஜித்தின் பல படங்களுக்கு யுவன் இசையமைத்துள்ளார். பல விருதுகளையும் வென்றுள்ளார். யுவன், தமிழ் சினிமாவிற்கு வந்து 25 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. இதனை தமிழ் சினிமா கொண்டாடி வருகிறது.

யுவனின் இசைக்கச்சேரி
யுவனின் 25வது ஆண்டை கொண்டாடுவதற்காக சென்னையில் யுவனின் இசை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் இசையமைப்பாளர் டி.இமான், டைரக்டரும் நடிகருமான செல்வராகவன் உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர். இதில் யுவன் தனது இசையில் உருவாக்கப்பட்ட சர்வம் படத்தில் வரும் நீதானே உள்ளிட்ட பல பாடல்களை பாடி அசத்தினார்.

செல்வராகவன் சொன்ன ஒரு வார்த்தை
விழாவில் யுவன் பற்றி பேசிய செல்வராகவன், அவர் என்றைக்கும் உணர்ச்சி வசப்பட்டோ, சோகமாக இருந்தோ நான் பார்த்ததே இல்லை. எந்த சூழ்நிலையாக இருந்தாலும் அவரது முகத்தில் ஒரு ஸ்மைல் இருந்து கொண்டே இருக்கும். யுவன் பற்றி ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமானால், "நண்பேன்டா". ஏன் என்றால் எவ்வளவு கஷ்டமான சூழல், பொருளாதார நெருக்கடியில் பணம் எடுத்துக் கொண்டிருக்கிறோம் யாரும் பாடலுக்கு இசையமைத்து தர மாட்டார்களே. சரி யுவனிடம் கேட்டு பார்க்கலாம் என நினைத்து கேட்டால், கொஞ்சும் யோசிக்காமல், ஓகே பண்ணி விடலாம் என்பார்.

கண் கலங்கிய செல்வராகவன்
அவரை பற்றி பலருக்கும் தெரியாத விஷயம், அவர் நல்ல இசையமைப்பாளர் மட்டுமல்ல. நல்ல மனம் உடைய மனிதரும் கூட என்றார் செல்வராகவன். புதுப்பேட்டை இசையை யுவன் வாசித்ததும் அதற்கு ரசிகர்கள் எழுப்பிய விசில் சத்தத்தை பார்த்து செல்வராகவன் கண் கலங்கி போனார். மேடையில் இமான் கீ போர்டு வாசிக்க, யுவன் பாடியது ரசிகர்களை செம குஷியாக்கியது.