Just In
- 17 min ago
தோத்துட்டேன் மச்சான்.. பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு போனில் உரையாடிய சோமசேகர்.. வைரலாகும் வீடியோ!
- 30 min ago
பேண்டை கழட்டி 'அதை' காட்டினார்.. பிரபல இயக்குநர் மீது யுனிவர்சிட்டி பட நடிகை பகீர் புகார்!
- 1 hr ago
பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரிக்கு வாழ்த்து சொன்ன சினிமா பிரபலங்கள்.. பதிலுக்கு நன்றி சொன்ன ஆரி!
- 2 hrs ago
மீண்டும் இணைந்த கவின் லாஸ்லியா.. பிக்பாஸ் சக்சஸ் பார்ட்டியில் சந்திப்பு.. தீயாய் பரவும் போட்டோஸ்!
Don't Miss!
- News
அமெரிக்க வரலாற்றிலேயே... வயதான அதிபர்... விசித்திர சாதனையைப் படைக்கும் ஜோ பைடன்
- Lifestyle
இந்த டீ நீங்க தூங்கும்போதுகூட உங்க கொழுப்பை குறைத்து உடல் எடையை குறைக்க உதவுமாம்...!
- Sports
டெஸ்ட் தரவரிசை.... 4வது இடத்துக்கு இறங்கிய கேப்டன்... முதல் 50 இடங்களில் 8 இந்திய வீரர்கள்!
- Education
தனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகள் கூடுதல் வருகைப் பதிவு!
- Automobiles
வால்வோ எஸ்60 சொகுசு காருக்கு ஆன்லைனில் புக்கிங் துவங்கியது... முதலில் வருவோருக்கு சகாய விலை!
- Finance
தங்கம், ரியல் எஸ்டேட் முதலீடுகள்.. நீங்கள் எவ்வளவு வரி செலுத்துகிறீர்கள் தெரியுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கோடிகள்ல சம்பளம் வாங்கிட்டு கொஞ்சம் கூட மனசாட்சி இல்லையே... ஹீரோயின்களை விளாசிய பிரபல நடிகர்!
ஐதராபாத்: கோடிகளில் சம்பளம் வாங்கிவிட்டு கொஞ்சம் கூட உதவாமல் சில ஹீரோயின்கள் இருப்பதாக நடிகர் ஒருவர் விளாசியுள்ளார்.
தமிழ், ஶ்ரீகாந்த் நடித்த ஜூட் படம் தமிழில் நடிகராக அறிமுகமானவர், தெலுங்கு நடிகர் பிர்ம்மாஜி.
சிம்பு, ஜோதிகா நடித்த சரவணா, விக்ரமன் இயக்கிய சென்னை காதல், ராதாமோகன் இயக்கத்தில் அல்லு சிரிஸ் நடித்த கெளரவம், பிரசாந்த் நடித்த சாகசம் ஆகிய படங்களில் இவர் நடித்திருக்கிறார்.
21 நாள் தனித் தனியாத்தான் இருக்கணும்.. லூட்டி அடிக்கக்கூடாது.. மன்சூர் அலிகான் குசும்பு !

கொரோனா வைரஸ்
தெலுங்கில் ஏராளமான படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்துள்ள இவர், மலையாளம், கன்னட படங்களிலும் நடித்துள்ளார். இப்போது கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வீட்டுக்குள் முடங்கி கிடக்கின்றனர். சினிமா தொழில் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்புகள் இல்லாததால், நடிகர், நடிகைகளும் வீட்டுக்குள் முடங்கியுள்ளனர்.

நடிகர்கள் உதவி
தினசரி சம்பளம் வாங்கும் சினிமா தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு உதவும்படி, தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் கடந்த சில நாட்களுக்கு முன் நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்களுக்கு கோரிக்கை விடுத்திருந்தது. இதை ஏற்று ரஜினிகாந்த், சிவகுமார், சூர்யா, கார்த்தி உட்பட ஏராளமான நடிகர்கள் உதவினர். பல லட்சங்களை வழங்கினர்.

பல கோடிகள்
பின்னர் முதலமைச்சர் நிவாரண நிதிக்கும் சிலர் உதவினர். தெலுங்கு சினிமா நடிகர்கள் தாரளமாக போட்டிப் போட்டுக்கொண்டு கோடிகளை அறிவித்தனர். நடிகர்கள், ராம்சரண், பவன்கல்யாண், அல்லு அர்ஜுன், பிரபாஸ் உட்பட பலர் பல கோடிகளை கொடுத்துள்ளனர்.
இந்நிலையில், நடிகர் பிரம்மாஜி நடிகைகளை கடுமையாகச் சாடியுள்ளார்.

மும்பை நடிகைகள்
அவர் கூறும்போது, தென்னிந்திய சினிமாவில் கோடிகளில் சம்பளம் வாங்கும் மும்பை நடிகைகள், இதற்கு கொஞ்சம் கூட உதவாதது ஆச்சரியமாக இருக்கிறது. பல முன்னணி நடிகைகள் இதற்கு உதவவில்லை. நடிகை லாவண்யா திரிபாதி மட்டுமே முன்வந்து உதவி இருக்கிறார். மற்றவர்கள் என்ன ஆனார்கள்? எவ்வளவு தொகை என்பது முக்கியமல்ல, லட்சங்களை கொடுக்க வேண்டும் என்பது முக்கியமல்ல.

குணசித்திர நடிகர்கள்
சில ஆயிரம் ரூபாய்களையாவது கொடுத்து உதவ வேண்டாமா? என்று அவர் கேட்டுள்ளார். இதுபோன்ற நேரத்தில்தான் எல்லோரும் உதவவேண்டும். அதிக சம்பளம் வாங்குபவர்கள் உதவுவதில் என்ன பிரச்னை இருக்கப் போகிறது? அதோடு அதிக சம்பளம் வாங்கும் சில குணசித்திர நடிகர்கள் கூட உதவாமல் அமைதி காப்பது வியப்பைத் தருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.