Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
தென்னிந்திய தயாரிப்பாளர் ஒருவர் என்னை படுக்கைக்கு கூப்பிட்டார்! - ராதிகா ஆப்தே
சென்னை: தென்னிந்திய சினிமாவில் செக்ஸ் தொல்லை இருப்பது உண்மைதான் என்று நடிகை ராதிகா ஆப்தே கூறியுள்ளார்.
சினிமா துறையில் செக்ஸ் தொல்லைகள் இருப்பதாக நடிகைகள் பலர் குற்றம் சாட்டி வருகிறார்கள். புதிதாக நடிக்க வரும் நடிகைகளுக்கு பாலியல் தொல்லைகள் அதிகமிருப்பதாகவும் வெளிப்படையாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தெலுங்கு, தமிழ், மலையாளத்தில்...
தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளப் படத் துறையில் நடிக்க வாய்ப்பு கேட்டு வரும் நடிகைகளை சிலர் படுக்கைக்கு அழைப்பதாக நடிகைகள் சிலர் வெளிப்படையாகவே குற்றம் சாட்டினர். ஆனால் விரிவாக எதுவும் சொல்லவில்லை.
ராதிகா ஆப்தே
தமிழில் டோனி, வெற்றிச்செல்வன், கபாலி படங்களில் நடித்த ராதிகா ஆப்தேவும் இப்போது இதே குற்றச்சாட்டைக் கூறியுள்ளார். இந்தி பட உலகில் விவகாரமான நடிகையாக அறியப்பட்டவர் ராதிகா ஆப்தே. அரைகுறை ஆடையில் ராதிகா ஆப்தே உள்ள பட படங்கள் ஆன்லைனில் வலம் வந்தன. இதற்கெல்லாம் உச்சமாக அவரது நிர்வாண வீடியோக்களும் இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
திடீர்னு படுக்கைக்கு கூப்பிட்டார்
தென்னிந்திய பட உலகம் பற்றி ராதிகா ஆப்தே கூறுகையில், "தென்னிந்திய பட உலகில் நடிகைகளை படுக்கைக்கு அழைப்பது உண்மைதான். நான் ஒரு முறை தயாரிப்பாளர் ஒருவரைச் சந்தித்தேன். படம் சம்பந்தமாக பேசிக்கொண்டு இருந்தோம். அவர் திடீரென்று என்னை படுக்கைக்கு அழைத்தார். இதனால் அதிர்ச்சியானேன்.
மறுத்துவிட்டேன்
நான் அவருக்கு உடன்படவில்லை. இப்படிப்பட்டவர்களை உதாசீனம் செய்து விட்டேன். அதனால்தான் தென்னிந்திய மொழி படங்களில் எனக்கு அதிக பட வாய்ப்புகள் வரவில்லை என்று கருதுகிறேன்," என்றார்.