Just In
- 19 min ago
இன்னும் முடியாத கிராண்ட் ஃபினாலே ஷூட்டிங்.. டைட்டில் வின்னர் அறிவிப்பை தாமதப்படுத்துவது ஏன்?
- 41 min ago
ஆரி, பாலா, ரம்யா, ரியோ, சோம்.. செம சூப்பரா இருக்காங்களே.. இறுதிப்போட்டியில் பங்கேற்ற குடும்பங்கள்!
- 1 hr ago
அனிதாவோட அப்பாவுக்கு என்னை ரொம்ப பிடிக்குமாம்.. கமலிடம் நெகிழ்ந்த ஆரி.. என்ன சொன்னார் பாருங்க!
- 1 hr ago
சில வருட காதல்.. ஓகே சொன்ன குடும்பம்.. துபாய் காதலரை மணக்கும் பிரபல சீரியல் நடிகை.. பரவும் தகவல்!
Don't Miss!
- Sports
கடும் மோதல்.. ஒரு கோல் கூட அடிக்காத மும்பை சிட்டி - ஹைதராபாத்!
- News
மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். 104-வது பிறந்த நாள்.. ட்விட்டரில் பிரதமர் மோடி புகழ் வணக்கம்
- Finance
அதிரடி ஆஃபர்.. ரூ.877 ரூபாயில் விமானத்தில் போகலாம்.. இண்டிகோவின் சரவெடி சலுகை..!
- Automobiles
வாகனத்தில் தனியாக செல்லும்போது மாஸ்க் அணிவது கட்டாயமா, இல்லையா? - மத்திய அரசு விளக்கம்
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Lifestyle
வார ராசிபலன் 17.01.2021 முதல் 23.01.2021 வரை – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
‘ஹேப்பி பர்த்டே சுனிதா’ நாடகத்திற்காக லண்டன் பறந்த ஷபானா ஆஸ்மி
மும்பை: பிரபல நடிகையான ஷபானா ஆஸ்மி இங்கிலாந்து நாடகம் ஒன்றில் நடிப்பதற்காக லண்டன் சென்றுள்ளார்.
இந்திய சினிமாவின் தலைசிறந்த நடிகர்களில் ஒருவரான ஷபானா ஆஸ்மி, பயர் உள்ளிட்ட பரபரப்பு படங்களில் நடித்தவர். இவருக்கு நாடகங்கள் மீது தீராக் காதல். இவர் நாடோடி போல நாடகங்களுக்காகச் சுற்றிக் கொண்டிருப்பதாக தன்னை தன் கணவரே கிண்டலடித்திருப்பதாக ஷபானா ஆஸ்மி முன்பொரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இங்கிலாந்து நாடகக் கம்பெனியின் நாடகமொன்றில் நடிப்பதற்காக லண்டன் சென்றுள்ளார் ஷபானா ஆஸ்மி.

நாடக நிறுவனம்...
லண்டனில் உள்ள நாடக நிறுவனம் ‘ரிஃப்கோ ஆர்ட்ஸ்'. ஏற்கனவே, பிரிட்டன்ஸ் காட் பங்கரா, பிரேக் தி ஃப்ளோர்போர்ட்ஸ் மற்றும் டிரேஞ்ச்ட் மேரேஜ் போன்ற நாடகங்களை இந்த நிறுவனம் தயாரித்துள்ளது.

ஹேப்பி பர்த்டே சுனிதா...
இந்நிலையில், புதிதாக ஹேப்பி பர்த்டே சுனிதா' என்ற தலைப்பில் புதிய நாடகம் ஒன்றைத் தயாரிக்கிறார்கள்.

பஞ்சாபி மனைவி...
ஹார்வே விர்தி மற்றும் பர்வேஷ்குமார் ஆகியோர் இந்த நாடகத்தை இயக்குகிறார்கள். இந்த நாடகத்தில் மத்தியதர பஞ்சாபி மனைவி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ஷபானா ஆஸ்மி.

லண்டன் பயணம்...
இதற்காக லண்டன் புறப்பட்டுச் சென்றுள்ளார் ஷபானா ஆஸ்மி. இரண்டு மாதங்கள் அங்கு தங்கியிருந்து அந்த நாடகத்தில் நடிக்கவுள்ளதாக, ஷபானா ஆஸ்மி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஒத்திகை...
மேலும், இந்த நாடகத்திற்காக ஒத்திகை நாளை முதல் ஆரம்பிக்க உள்ளது. இந்த நாடகத்தின் முதல் ஷோ வரும் செப்டம்பர் 19ந்தேதி அரங்கேற உள்ளது குறிப்பிடத்தக்கது.