Don't Miss!
- News வரிசையில் நின்று வாக்களித்தார் எடப்பாடி பழனிசாமி.. ஓட்டு போட்ட பின்னர் வைத்த முக்கிய கோரிக்கை!
- Sports என்னை மிரட்டி ஆர்சிபிக்கு விளையாட வைத்தார் கோலி.. உலககோப்பை தோல்வி வலித்தது- கேஎல் ராகுல் பேச்சு
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
‘ஹேப்பி பர்த்டே சுனிதா’ நாடகத்திற்காக லண்டன் பறந்த ஷபானா ஆஸ்மி
மும்பை: பிரபல நடிகையான ஷபானா ஆஸ்மி இங்கிலாந்து நாடகம் ஒன்றில் நடிப்பதற்காக லண்டன் சென்றுள்ளார்.
இந்திய சினிமாவின் தலைசிறந்த நடிகர்களில் ஒருவரான ஷபானா ஆஸ்மி, பயர் உள்ளிட்ட பரபரப்பு படங்களில் நடித்தவர். இவருக்கு நாடகங்கள் மீது தீராக் காதல். இவர் நாடோடி போல நாடகங்களுக்காகச் சுற்றிக் கொண்டிருப்பதாக தன்னை தன் கணவரே கிண்டலடித்திருப்பதாக ஷபானா ஆஸ்மி முன்பொரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இங்கிலாந்து நாடகக் கம்பெனியின் நாடகமொன்றில் நடிப்பதற்காக லண்டன் சென்றுள்ளார் ஷபானா ஆஸ்மி.
நாடக நிறுவனம்...
லண்டனில் உள்ள நாடக நிறுவனம் ‘ரிஃப்கோ ஆர்ட்ஸ்'. ஏற்கனவே, பிரிட்டன்ஸ் காட் பங்கரா, பிரேக் தி ஃப்ளோர்போர்ட்ஸ் மற்றும் டிரேஞ்ச்ட் மேரேஜ் போன்ற நாடகங்களை இந்த நிறுவனம் தயாரித்துள்ளது.
ஹேப்பி பர்த்டே சுனிதா...
இந்நிலையில், புதிதாக ஹேப்பி பர்த்டே சுனிதா' என்ற தலைப்பில் புதிய நாடகம் ஒன்றைத் தயாரிக்கிறார்கள்.
பஞ்சாபி மனைவி...
ஹார்வே விர்தி மற்றும் பர்வேஷ்குமார் ஆகியோர் இந்த நாடகத்தை இயக்குகிறார்கள். இந்த நாடகத்தில் மத்தியதர பஞ்சாபி மனைவி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ஷபானா ஆஸ்மி.
லண்டன் பயணம்...
இதற்காக லண்டன் புறப்பட்டுச் சென்றுள்ளார் ஷபானா ஆஸ்மி. இரண்டு மாதங்கள் அங்கு தங்கியிருந்து அந்த நாடகத்தில் நடிக்கவுள்ளதாக, ஷபானா ஆஸ்மி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ஒத்திகை...
மேலும், இந்த நாடகத்திற்காக ஒத்திகை நாளை முதல் ஆரம்பிக்க உள்ளது. இந்த நாடகத்தின் முதல் ஷோ வரும் செப்டம்பர் 19ந்தேதி அரங்கேற உள்ளது குறிப்பிடத்தக்கது.