Don't Miss!
- News வரிசையில் நின்று வாக்களித்தார் எடப்பாடி பழனிசாமி.. ஓட்டு போட்ட பின்னர் வைத்த முக்கிய கோரிக்கை!
- Sports என்னை மிரட்டி ஆர்சிபிக்கு விளையாட வைத்தார் கோலி.. உலககோப்பை தோல்வி வலித்தது- கேஎல் ராகுல் பேச்சு
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கார் விபத்து வழக்கு: தீர்ப்புக்கு முன்பு சல்மானை சந்தித்து ஆறுதல் சொன்ன ஷாருக்
மும்பை: கார் விபத்து வழக்கில் சிறை தண்டனை பெற்றுள்ள சல்மான்கானை பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தீர்ப்புக்கு முன்னதாக நேற்று அவரது வீட்டில் சந்தித்து பேசினார்.
மும்பை பாந்த்ராவில் உள்ள கேலக்ஸி அடுக்கு மாடி குடியிருப்பில் இருக்கும் நடிகர் சல்மான்கானின் வீடு, தீர்ப்பு காரணமாக இன்று காலையில் இருந்தே மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டது. சல்மான்கானின் உறவினர்கள் அனைவரும் பதற்றத்துடன் இருந்தனர். அவர்கள் சல்மான்கானை பார்க்கும் போதெல்லாம், "நல்லதே நடக்கும்" என்று கூறினார்கள்.
எனினும் கனத்த இதயத்துடனேயே அவர் நீதிமன்றத்திற்கு சென்றார். அப்போது அவரை காண வீட்டுக்கு வெளியில் ஏராளமான ரசிகர்கள் திரண்டிருந்தனர்.
ஷாருக்கான் சந்திப்பு
இதனிடையே நேற்றைய தினம் நடிகர் ஷாருக்கான், சல்மான்கான் தங்கியுள்ள கேலக்ஸி அடுக்குமாடி குடியிருப்புக்கு வந்து சில மணிநேரங்கள் பேசிக்கொண்டிருந்தார். இதேபோல நடிகர் சோஹா அலிகான், இயக்குநர் டேவிட் தவான் ஆகியோரும் சல்மான் கானை சந்தித்து பேசியதாக தெரிகிறது.
ப்ரீத்தி ஜித்தா, சோனாக்ஷி
இந்த நிலையில் சல்மான்கான் குற்றவாளி என்று இன்று தீர்ப்பளிக்கப்பட்ட பின்னர் பாலிவுட் திரை உலக நட்சத்திரங்கள் அதிர்ச்சியை வெளிப்படுத்தினர். ஏராளமோனோர் சல்மான்கான் வீட்டிற்குக் சென்றனர். நடிகை சங்கீதா பிஜ்லானி, சோனாக்ஷி சின்கா, ப்ரீத்தி ஜிந்தா ஆகியோர் சல்மான்கான் வீட்டிற்குக் சென்றனர்.