தெலுங்கில் ஒரு நேரடிப் படம் இயக்குவேன்- இயக்குநர் ஷங்கர்
தெலுங்கில் ஒரு படத்தை இயக்க நீண்ட நாளாக ஆசை உள்ளது. அதனை விரைவில் நிறைவேற்றுவேன் என்று இயக்குநர் ஷங்கர் கூறினார்.
ஷங்கர் இயக்கியுள்ள ஐ படத்தின் தெலுங்கு இசை வெளியீட்டு விழா நேற்று ஹைதராபாதில் நடந்தது. இதில் இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் ஷங்கர் பேசும்போது, "தெலுங்கு மக்கள் என் மீது வைத்துள்ள அன்பு திகைக்க வைக்கிறது. இந்த அன்புக்கு என்ன செய்யப் போகிறேன் என்று தெரியவில்லை.
எனக்கு தெலுங்கில் நேரடிப் படம் இயக்க விருப்பம். பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு படம் இயக்க முயன்று, பின்னர் கைவிட்டுவிட்டேன்.
அதன் பிறகு வாய்ப்பு அமையவில்லை. வரும் நாட்களில் நிச்சயம் ஒரு தெலுங்குப் படத்தை நேரடியாக இயக்கப் போகிறேன்," என்றார்.


Click it and Unblock the Notifications











