Don't Miss!
- News வரிசையில் நின்று வாக்களித்தார் எடப்பாடி பழனிசாமி.. ஓட்டு போட்ட பின்னர் வைத்த முக்கிய கோரிக்கை!
- Sports என்னை மிரட்டி ஆர்சிபிக்கு விளையாட வைத்தார் கோலி.. உலககோப்பை தோல்வி வலித்தது- கேஎல் ராகுல் பேச்சு
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
நெஞ்சுவலி காரணமாக.. பிரபல பின்னணிப் பாடகர் சங்கர் மகாதேவன் மருத்துவமனையில் அனுமதி
டெல்லி: அடுத்தடுத்து ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக பிரபல பின்னணிப் பாடகர் சங்கர் மகாதேவன் டெல்லியில் உள்ள பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
வராக நதிக்கரையோரம், தனியே தன்னந்தனியே உட்பட பல்வேறு பிரபலமான பாடல்களைப் பாடி தமிழ் ரசிகர்களின் நெஞ்சில் தனக்கென்று ஒரு தனியிடத்தைப் பிடித்தவர் சங்கர் மகாதேவன்.
கடந்த வெள்ளிக்கிழமை கடுமையான நெஞ்சுவலி காரணமாக சங்கர் மகாதேவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு ஈசிஜி எடுக்கப்பட்டது.
மேலும் மருத்துவர்கள் அவரை சில நாட்கள் மருத்துவமனையில் தங்கி ஓய்வு பெற்று செல்லுமாறு அறிவுறுத்தியிருக்கின்றனர்.
இந்த செய்திகளை சங்கர் மகாதேவனின் செய்தித் தொடர்பாளர் உறுதி செய்திருக்கிறார். அவர் கூறும்போது "சங்கர் மகாதேவன் தற்போது நன்றாக இருக்கிறார்.
இன்னும் ஒருசில தினங்களில் அவர் குணமாகி மும்பை திரும்பிவிடுவார்" என்று சங்கர் மகாதேவன் உடல்நிலை குறித்து அவர் விளக்கம் அளித்திருக்கிறார்.