ரஜினி படத்துக்குப் பிறகு முதல் முறையாக பாகிஸ்தானில் வெளியாகிறது ஐ
ஷங்கரின் ஐ படம் பாகிஸ்தானிலும் வெளியாகவிருக்கிறது. பாகிஸ்தானில் ஏற்கெனவே ரஜினியின் சிவாஜி மற்றும் எந்திரன் (ரோபோ) வெளியானது. பல ஆண்டுகள் கழித்து பாட்ஷாவும் வெளியானது.
இந்தப் படங்களுக்குப் பிறகு இப்போதுதான் ஒரு தமிழ்ப் படம் பாகிஸ்தானில் வெளியாகிறது.
ஆஸ்கார் பிலிம்ஸ் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாக்கியுள்ள ஐ படம் உலகம் முழுவதும் வருகிற ஜனவரி 14-ந் தேதி வெளியாகவிருக்கிறது. .
உலகின் பல்வேறு நாடுகளில் ஐ யை வெளியிடுகிறார் ஆஸ்கார் ரவிச்சந்திரன்.
பாகிஸ்தானிலும் இந்தப் படத்தை வெளியிடுகிறார்கள். பாகிஸ்தானில் வெளியாகும் இரண்டாவது தமிழ்ப் படம் ஐதான். ரஜினி நடித்த சிவாஜிதான் அங்கு முதலில் வெளியானது. எந்திரன், பாட்ஷா போன்ற படங்கள் இந்தியில்தான் அங்கு வெளியாகின.


Click it and Unblock the Notifications












