பொண்டாட்டி இல்லாமல் தனியாக தீபாவளி கொண்டாடிய சாந்தனு
சென்னை: நடிகர் சாந்தனு தீபாவளி பண்டிகையை மனைவி இல்லாமல் தனியாக கொண்டாடியுள்ளார்.
நடிகர் சாந்தனுவுக்கும், டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியான கீர்த்திக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. சாந்தனு இந்த ஆண்டு தீபாவளியை மனைவி இல்லாமல் தனியாக கொண்டாடியுள்ளார்.

கீர்த்தி தனது தாயுடன் தீபாவளி பண்டிகையை சிங்கப்பூரில் கொண்டாடியுள்ளார். தனியாக தீபாவளி கொண்டாடியது பற்றி சாந்தனு ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
ஆஹான்.. பொண்டாட்டி தீபாவளியை சிங்கப்பூரில் கொண்டாடுகிறார்.. இந்த தீபாவளிக்கு நான் பேச்சுலர் என்று தெரிவித்துள்ளார்.
சாந்தனு தற்போது இரண்டு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











