Don't Miss!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- News ம்ம்.. என்னோட 90 நிமிஷ பேச்சை கேட்டு காங்கிரஸ் கூட்டணியே பீதியாகிபோய் கிடக்கு.. பெருமிதப்படும் மோடி
- Lifestyle இந்த படத்துல உங்களுக்கு எது முதல்ல தெரியுதுன்னு சொல்லுங்க.. உங்கள பத்தின ரகசியத்தை சொல்றோம்..
- Sports Thank you ரஹானே! தயவு செய்து ஓய்வு பெற்றுவிடுங்க.. தொடர்ந்து சொதப்பும் வீரருக்கு வாய்ப்பு ஏன்?
- Automobiles குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
படுக்கைக்கு வராட்டா சீரியலில் இருந்து நீக்கிவிடுவேன் என மிரட்டினார்: தயாரிப்பாளர் மீது நடிகை புகார்
மும்பை: பிரபல தொலைக்காட்சி தொடரின் தயாரிப்பாளர் சஞ்சய் கோஹ்லி மீது போலீசில் பாலியல் தொல்லை புகார் கொடுத்துள்ளார் நடிகை ஷில்பா ஷிண்டே.
பாபி ஜி கர் பர் ஹை என்ற பிரபல இந்தி தொலைக்காட்சி தொடரில் நடித்து வந்தவர் ஷில்பா ஷிண்டே. அந்த தொடரை சஞ்சய் கோஹ்லி என்பவர் தனது மனைவியுடன் சேர்ந்து தயாரித்து வருகிறார்.
இந்நிலையில் சஞ்சய் மீது மும்பை போலீசில் பாலியல் தொல்லை புகார் கொடுத்துள்ளார் நடிகை ஷில்பா. இது குறித்து ஷில்பா கூறுகையில்,
சஞ்சய்
ஷூட்டிங் ஸ்பாட்டில் சஞ்சய் என்னிடம் நடந்து கொண்ட விதம் சரியில்லை. என்னை அடிக்கடி செக்ஸி என்று அழைத்தார். மேலும் ஏதாவது காரணம் சொல்லி என் மீது கை வைத்தார்.
மிரட்டல்
தன்னுடன் படுக்கைக்கு வராவிட்டால் தொலைக்காட்சி தொடரில் இருந்து நீக்கிவிடுவேன் என்று சஞ்சய் என்னை மிரட்டினார். இது குறித்து நான் சக நடிகையிடம் கூறியதற்கு அவர் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
மனஅழுத்தம்
கடந்த ஆண்டு மனஅழுத்தம் மற்றும் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டேன். அதை தாங்க முடியாமல் தான் தற்போது வெளியே கூறுகிறேன். இந்த துறையில் இது போன்ற பாலியல் தொல்லை குறித்து பேச நடிகைகள் பயப்படுகிறார்கள்.
தொல்லை
சஞ்சய் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை ஒருமுறை மேக்கப்மேன் பிங்கு பட்வா பார்த்தார். இதையடுத்து மறுநாளே பிங்குவை வேலையை விட்டு நீக்கிவிட்டனர்.
நீக்கம்
சஞ்சய் கோஹ்லியின் ஆசைக்கு இணங்க மறுத்ததை அடுத்து என்னை தொலைக்காட்சி தொடரில் இருந்து நீக்கிவிட்டார். இது குறித்து புகார் அளிக்க காவல் நிலையம் சென்றால் போலீஸ்காரர் மகேஷ் பாட்டில் நான் கூறுவதை கண்டுகொள்ளாமல் இருந்தார் என்றார் ஷில்பா