Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பிரச்சாரம் செய்யப் போகும் ஸ்ருதி ஹாஸன், சமந்தா, சித்தார்த், நயன்: யாருக்காக தெரியுமா?
சென்னை: சட்டசபை தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி நடிகைகள் ஸ்ருதிஹாஸன், சமந்தா ஆகியோரை வைத்து குறும்படங்கள் எடுக்க உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலை அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்த தேவையான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் எடுத்து வருகிறது. இந்நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில்,
சட்டசபை தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தின் சார்பில் மக்களை கேட்டுக் கொள்ளப்படும். வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்து அனைத்து கல்லூரிகளிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம்.
நடிகர்கள் சூர்யா, கார்த்தி ஆகியோரை வைத்து வாக்களிப்பதன் அவசியம் குறித்த குறும்படங்களை தயாரித்து தியேட்டர்களில் வெளியிட்டுள்ளோம். விரைவில் நடிகைகள் ஸ்ருதி ஹாஸன், சமந்தா, நடிகர் சித்தார்த் ஆகியோரை வைத்து ஒரு குறும்படம் எடுக்க உள்ளோம்.
மேலும் நயன்தாரா உள்ளிட்ட பல நடிகைகளை வைத்தும் குறும்படம் எடுக்க உள்ளோம் என்றார்.