சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் சுருதிஹாசன்?
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் நடிக்க நடிகை சுருதியுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ரஜினிமுருகன் படத்திற்குப் பின் இயக்குநர் அட்லீயின் உதவியாளர் பாக்யராஜ் கண்ணன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார் சிவகார்த்திகேயன்.

சில மாதங்களுக்கு முன் சொந்தப் படநிறுவனம் தொடங்கிய நடிகர் சிவகார்த்திகேயன் தான் நடிக்கவிருக்கும் அடுத்த படம் பெரியளவில் வரவேண்டும் என்று பார்த்துப் பார்த்து தொழில்நுட்பக் கலைஞர்களை தேர்வு செய்து வருகிறார்.
இந்தப் படத்தில் பி.சி.ஸ்ரீராம், ரசூல் பூக்குட்டி ஆகியோர் இணைந்து பணியாற்றவிருக்கின்றனர். ஏற்கனவே படத்தின் இசைக்கு முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக மாறியிருக்கும் அனிருத்தை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
இந்நிலையில் நடிகையாக சுருதிஹாசனை நடிக்க வைக்க தற்போது பேச்சு வார்த்தைகள் நடந்து வருகின்றன. தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் சுருதி முன்னணி நடிகையாகத் திகழ்வதால் அவரையே நடிக்க வைக்க படக்குழுவினர் முடிவு செய்திருக்கின்றனராம்.
சுருதியின் நடிப்பில் புலி மற்றும் தல 56 ஆகிய படங்கள் அடுத்தடுத்து வரவிருக்கின்றன, மேலும் சூர்யாவின் சிங்கம் 3 படத்திலும் சுருதி தற்போது நடிக்கவிருக்கிறார்.
3 மொழிகளிலும் பறந்து பறந்து நடித்துக் கொண்டிருக்கும் சுருதி சிவகார்த்திகேயனின் படத்தில் நடிக்க சம்மதம் சொல்வாரா? என்பது தெரியவில்லை.
முன்னதாக நடிகைகள் சமந்தா மற்றும் ஷாம்லி ஆகியோரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











