சத்யராஜ் - சிபிராஜ் நடிப்பில் முடிந்தது "ஜாக்சன் துரை"

By Manjula

சென்னை: நடிகர் சத்யராஜ் பேயாக நடித்திருக்கும் ஜாக்சன் துரையின் படப்பிடிப்பு முழுவதும் தற்போது முடிவடைந்து விட்டது என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

"பர்மா" படத்தின் மூலம் புகழ்பெற்ற இயக்குநர் தரணி தரண் இயக்கத்தில் சிபிராஜ் நாயகனாக நடித்த ஜாக்சன் துரை திரைப்படத்தின் முழு படப்பிடிப்பும் தற்போது முடிவடைந்து இருக்கிறது.

Sibiraj's Jackson Durai Completes its Shoots

1940களில் நடப்பது போன்ற இந்தக் கதையில் நடிகர் சிபிராஜ் காவலராகவும், சத்யராஜ் பேயாகவும் நடித்திருக்கின்றனர். இவர்களுடன் இணைந்து பிந்து மாதவி, "நான் கடவுள்" ராஜேந்திரன் மற்றும் கருணாகரன் ஆகியோர் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.

நகைச்சுவை கலந்த காமெடிப் படமாக உருவாகியிருக்கும் ஜாக்சன் துரை படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைத்திருக்கிறார். பர்மா படத்தின் மூலம் திரும்பிப் பார்க்க வைத்த இயக்குநர் தரணி தரண் கதை, திரைக்கதை எழுதி படத்தை இயக்கியிருக்கிறார்.

சுமார் 5 கோடி செலவில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தை ஸ்ரீ கிரீன் புரொடக்சன்ஸ் சார்பில் எம்.எஸ்.சரவணன் தயாரித்திருக்கிறார். படத்தின் போஸ்ட் புரொடக்க்ஷன் பணிகள் தற்போது ஜெட் வேகத்தில் நடைபெற்று வருகின்றன.

படத்தின் இசை வெளியீடு பற்றிய அறிவிப்பை படக்குழுவினர் விரைவில் வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கோடம்பாக்கத்தில் மீண்டும் பேய்களின் ஆட்டம் ஆரம்பம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X