Don't Miss!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Lifestyle April Horoscope 2024: ஏப்ரல் மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு பண மழை பொழியப் போகுது...
- Technology ரூ.17,000 பட்ஜெட்ல பரபரப்பு! 70W சார்ஜிங், 6000mAh பேட்டரி, 24GB ரேம், 1TB மெமரி, 5G ஆதரவு.. ஏப்.4 முதல் SALE!
- News கடனுக்காக இரவில் அசிங்கமாக பேசிய நிதி நிறுவன ஊழியர்கள்? தேனியில் குடும்பமே தற்கொலை
- Sports ரூ.8.4 கோடியை மறந்துவிடு.. உன்னோட வேலை அதுமட்டும் தான்.. தோனியின் வார்த்தை குறித்து சிஎஸ்கே சிங்கம்!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
எக்கச்சக்க பணம், மதுபாட்டில்கள்: மும்பை ஏர்போர்ட்டில் பிரபல பாடகர் கைது
இந்தி பாடகர் மிகா சிங் பாங்காக்கில் நடந்த கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு தனியார் விமானம் மூலம் நேற்று இரவு மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கினார். அப்போது அவரை சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது அவரிடம் 3 லட்சம் ரூபாயும் மற்றும் 12,000 அமெரிக்க டாலர்களும்(ரூ.6.36 லட்சம்) இருந்தன. மேலும் ஏகப்பட்ட மதுபான பாட்டில்களும் வைத்திருந்தார். அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக ரொக்கம் வைத்திருந்ததால் அவரை அதிகாரிகள் கைது செய்து விசாரித்தனர். பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
ஒரு பயணி 3,000 டாலர் ரொக்கம் மற்றும் 7,000 டாலருக்கான டிராவலர்ஸ் செக் மட்டுமே எடுத்துச் செல்ல முடியும். மேலும் ரூ. 7,500 ரொக்கம் எடுத்துச் செல்ல அனுமதி உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
முதலில் அவரிடம் மதுபாட்டில்கள் குறித்து தான் விசாரிக்கப்பட்டது. அப்போது அவரிடம் எவ்வளவு ரொக்கம் இருக்கிறது என்று கேட்டதற்கு ரூ.1 லட்சமும், 5,000 டாலரும் உள்ளது என்று தெரிவித்துள்ளார். அவர் மீது சந்தேகப்பட்டு சோதனை செய்ததில் தான் மொத்த பணமும் சிக்கியது.
கடந்த 2006ம் ஆண்டு பாலிவுட் நடிகை ராக்கி சாவந்தின் பிறந்தநாள் அன்று அவருக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுத்து பெரும் சர்ச்சையைக் கிளப்பியவர் மிகா சிங்.