Don't Miss!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Automobiles தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
- News தமிழ்நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு சம்பளம் எவ்வளவு.. இவ்வளவு சலுகைகளா? ஆச்சர்யமான தகவல்கள்
- Technology iPhone-க்கு நெத்தி அடி.. வயர்லெஸ் MagCharge உடன் வந்த முதல் ஆண்ட்ராய்டு போன்.. Samsung இல்லை OnePlus இல்லை..
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
பாடகி ஸ்ரேயா கோஷல் திடீர் திருமணம்.. மும்பை தொழிலதிபரை மணந்தார்
தேசிய விருது பெற்ற பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷலுக்கு நேற்று திருமணம் நடந்தது.
மும்பையைச் சேர்ந்த தனது இளம் வயது நண்பரும் தொழிலதிபருமான ஷைலாதித்யா முகோபாத்யாயாவை அவர் மணந்தார்.
இந்தியில் முதல் நிலை பாடகியாகத் திகழும் ஸ்ரேயா கோஷல் தமிழிலும் ஏராளமான சூப்பர் ஹிட் பாடல்களைப் பாடியுள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் தனது பேஸ்புக் பக்கத்தில் திருமணம் குறித்து சூசகமாக ஒரு நிலைத் தகவல் போட்டிருந்தார்.
அதன் பிறகு இன்று தனக்கு திருமணம் நடந்துவிட்டதாக படத்துடன் தகவல் வெளியிட்டுள்ளார்.
முழுக்க முழுக்க தனிப்பட்ட முறையில் நடந்த இந்த திருமணத்தில் திரையுலகப் பிரமுகர்கள் யாரும் பங்கேற்கவில்லை. வங்காளி முறைப்படி நடந்த இந்தத் திருமணம் குறித்து திரையுலகினர் பலருக்கே தெரியவில்லை.
திருமணம் முடிந்த பிறகுதான் அதுபற்றிய செய்தியை வெளியிட்டனர். விரைவில் பிரமாண்ட முறையில் வரவேற்பு நிகழ்ச்சி நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.
ஷைலாதித்யா மும்பையில் உள்ள பெரிய ஐடி நிறுவனத்துக்கு சொந்தக்காரர். சிறுவயதிலிருந்தே ஸ்ரேயா கோஷலின் நண்பர்.