twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பாடகி ஸ்ரேயா கோஷல் திடீர் திருமணம்.. மும்பை தொழிலதிபரை மணந்தார்

    By Shankar
    |

    தேசிய விருது பெற்ற பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷலுக்கு நேற்று திருமணம் நடந்தது.

    மும்பையைச் சேர்ந்த தனது இளம் வயது நண்பரும் தொழிலதிபருமான ஷைலாதித்யா முகோபாத்யாயாவை அவர் மணந்தார்.

    இந்தியில் முதல் நிலை பாடகியாகத் திகழும் ஸ்ரேயா கோஷல் தமிழிலும் ஏராளமான சூப்பர் ஹிட் பாடல்களைப் பாடியுள்ளார்.

    கடந்த ஜனவரி மாதம் தனது பேஸ்புக் பக்கத்தில் திருமணம் குறித்து சூசகமாக ஒரு நிலைத் தகவல் போட்டிருந்தார்.

    அதன் பிறகு இன்று தனக்கு திருமணம் நடந்துவிட்டதாக படத்துடன் தகவல் வெளியிட்டுள்ளார்.

    முழுக்க முழுக்க தனிப்பட்ட முறையில் நடந்த இந்த திருமணத்தில் திரையுலகப் பிரமுகர்கள் யாரும் பங்கேற்கவில்லை. வங்காளி முறைப்படி நடந்த இந்தத் திருமணம் குறித்து திரையுலகினர் பலருக்கே தெரியவில்லை.

    திருமணம் முடிந்த பிறகுதான் அதுபற்றிய செய்தியை வெளியிட்டனர். விரைவில் பிரமாண்ட முறையில் வரவேற்பு நிகழ்ச்சி நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

    ஷைலாதித்யா மும்பையில் உள்ள பெரிய ஐடி நிறுவனத்துக்கு சொந்தக்காரர். சிறுவயதிலிருந்தே ஸ்ரேயா கோஷலின் நண்பர்.

    English summary
    Top Singer Shreya Goshal quietly married her long-time steady Shiladitya Mukhopadhyaya in an 'extremely private ceremony' in suburban Mumbai.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X