Just In
- 9 hrs ago
நடுக்கடலில் அப்படியொரு போஸ் கொடுத்த பிக் பாஸ் பிரபலம்.. சிகப்பு நிற பிகினியில் ஜமாய்க்கிறாரே!
- 10 hrs ago
என்ன மாஸ்டர் ரெஃபரன்ஸா? ராஜமெளலியின் அடுத்த பிரம்மாண்டத்தின் கிளைமேக்ஸ் ஷூட் ஆரம்பம்!
- 11 hrs ago
அர்ச்சனாவை பார்த்தாலே பிடிக்கல.. பிக்பாஸ் பிரபலம் பகிர்ந்த போட்டோ.. காண்டாகும் நெட்டிசன்ஸ்!
- 12 hrs ago
கப்பை தட்டிய ஆரி.. தில்லாய் டிவிட்டிய அனிதா சம்பத்.. பார்த்து ஆறுதல் கூறும் ஃபேன்ஸ்!
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 20.01.2021: இன்று இந்த ராசிக்காரங்களுக்கு பரபரப்பான நாளாக இருக்கப் போகுது…
- News
அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா... இந்திய நேரப்படி இன்றிரவு 10 மணிக்கு நேரடி ஒளிபரப்பு..!
- Automobiles
ஐரோப்பிய கார்களின் தரத்தில் எக்ஸ்எல்5 காரை கொண்டுவரும் மாருதி!! இந்த ஒரு விஷயம் போதுமே..!
- Finance
பங்குச்சந்தை வளர்ச்சியை தீர்மானிக்கும் பட்ஜெட் 2021.. வரலாறு கூறும் அதிர்ச்சி தகவல்..!
- Sports
இந்தியாவை எப்பவும் குறைச்சு மதிப்பிடாதீங்க... பாடம் கத்துக்கங்க.. ஆஸ்திரேலிய ஹெட் கோச் குமுறல்
- Education
வேலை, வேலை, வேலை! ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
புண்படுத்துவதாக அமையும்.. சமூக படத்துக்கு 'கர்ணன்' டைட்டிலா? தனுஷுக்கு சிவாஜி பேரவை கடிதம்!
சென்னை: 'கர்ணன்' படத்தின் தலைப்பை மாற்ற வேண்டும் என்று நடிகர் தனுஷுக்கு சிவாஜி நலப் பேரவை கடிதம் அனுப்பியுள்ளது.
நடிகர் தனுஷ், இப்போது கர்ணன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதை மாரி செல்வராஜ் இயக்குகிறார்.
கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இந்தப் படத்தின் தலைப்புக்கு சிவாஜி சமூக நல பேரவை எதிர்ப்பு தெரிவித்து இருந்தது.

தனுஷுக்கு கடிதம்
இந்நிலையில் இந்த அமைப்பு, அந்த தலைப்பை மாற்ற வேண்டும் என்று தனுஷுக்கு கடிதம் எழுதியுள்ளது. இந்த அமைப்பின் தலைவர் கே.சந்திரசேகரன் அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: வணக்கம், தாங்கள் தற்போது கர்ணன் என்ற தலைப்பிலான திரைப்படத்தில் நடித்து வருவதாக அறிகிறோம்.

மனசாட்சிப்படி
நடிகர் திலகம் சிவாஜியின் லட்சோப லட்ச ரசிகர்களுக்கு மட்டுமல்ல, உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கும் 'கர்ணன்' என்றாலே நினைவில் நிற்பது நடிகர் திலகத்தின் கர்ணன் திரைப்படம்தான். ஒரு திரைப்படத்தின் பெயரை மீண்டும் பயன்படுத்த சட்டப்படி இடமிருந்தாலும், நியாயப்படி, மனசாட்சிப்படி, சில திரைப்படங்களின் பெயர்கள் மீண்டும் பயன்படுத்தாமல் தவிர்க்கப்பட வேண்டும்.

திருவிளையாடல்
ஏனெனில், அந்தப் பெயர்களே திரைப்படத்தின் கதைக்களத்தைத் தாங்கி கால காலத்திற்கும் நிலைத்து நிற்கக் கூடியதாக இருக்கும். அந்த வகையில்தான் தாங்கள் நடித்து ஏற்கனவே திருவிளையாடல் என்ற தலைப்பில் திரைப்படம் வெளிவரவிருந்தபோது எதிர்ப்பு தெரிவித்தோம். பிறகு திருவிளையாடல் ஆரம்பம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு திரைப்படம் வெளிவந்தது.

பச்சை விளக்கு
அதே சமயத்தில், தாங்கள் நடித்து வெளிவந்த உத்தமபுத்திரன் திரைப்படத்திற்கு நாங்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன். அது போலவே. ஆண்டவன் கட்டளை, ராஜா, பச்சை விளக்கு என்று நடிகர் திலகம் நடித்த படங்களின் பெயரிலேயே மீண்டும் பல திரைப்படங்கள் வெளி வந்துள்ளன.

தனித்துவம் அப்படி
அதுபோன்ற சமூகப்படங்களின் பெயர்களை மீண்டும் வைப்பதற்கு யாரும் எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கப் போவதில்லை. ஆனால், சரஸ்வதி சபதம், திருவிளையாடல், கர்ணன், வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் போன்ற குறிப்பிட்ட தலைப்புகள் மீண்டும் பயன்படுத்தப்படக்கூடாது. ஏனெனில் அந்தத் திரைப்படத் தலைப்பின் தனித்துவம் அப்படி.

கொடை வள்ளல்
கர்ணன் என்றாலே கொடுப்பவன். கொடை வள்ளல்தான். ஆனால் தாங்கள் நடிக்கும் திரைப்படத்தின் கதையோ உரிமைக்காகப் போராடும் ஒருவருடைய கதை என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது, மகாபாரதக் கதையையே மீண்டும் உருவாக்குகிறோம். அதில் கர்ணன் கதாபாத்திரம் வருவதால் இந்தப் பெயர் வைக்கப்பட்டிருக்கிறது என்றால் பரவாயில்லை.

ஏற்கத் தக்கதல்ல
ஒரு சமூகத் திரைப்படத்திற்கு கர்ணன் என்று பெயரிட்டு அதில் தாங்கள் நடிப்பது ஏற்கத் தக்கதல்ல. இது லட்சோபலட்ச நடிகர் திலகம் ரசிகர்களுக்கு மட்டுமல்ல, மகாபாரதத்தை நேசிக்கும் கோடிக்கணக்கானவர்களின் மனதையும் புண்படுத்தக் கூடியதாக அமையும். எனவே. கர்ணன் என்ற தலைப்பினை மாற்றி அமைத்திட வேண்டுமென நடிகர் திலகம் சிவாஜி சமூக நலப்பேரவை சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.